Advertisment

ஞானவாபி மசூதியில் பூஜையை தொடங்கிய இந்துக்கள்: ஜனாதிபதியை சந்திக்கும் முஸ்லீம் அமைப்புகள்

மாவட்ட நீதிபதியின் முடிவு... மிகவும் கேள்விக்குரியது. குறிப்பாக நீதிபதியின் கடைசி அலுவலக நாளில் . தீர்ப்பு வந்துள்ளது. சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஏ.எஸ்.ஐ அறிக்கையின் ஒருதலைப்பட்சமான வெளிப்பாடும் இங் கேள்வி எழுப்பபடுகிறது. இந்த அறிக்கை வெறும் கூற்று மட்டுமே- முஸ்லீம் அமைப்புகள் கூட்டறிக்கை

author-image
WebDesk
New Update
Gyanvapi prez.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் 

"திடீரென்று" பூஜை தொடங்கப்பட்டதற்கு வருத்தமும் கவலையும் தெரிவித்தனர். ஞானவாபி மசூதி வழக்கு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக தங்களது கவலைகளை தெரிவிக்க முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கோரியுள்ளனர்.

Advertisment

செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், பூஜை செய்ய தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீதிமன்றம் 7 நாள் கால அவகாசம் வழங்கியிருந்தும், பூஜையை விரைவாகத் தொடங்குவது, நிர்வாகத்திற்கும் வாதிக்கும் 

இடையே உள்ள "வெளிப்படையான கூட்டுறவை"  மீறுகிறது. மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்  மசூதி நிர்வாகக் குழுவின் எந்தவொரு முயற்சியையும் முன்கூட்டியே நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று கூறினர். 

மேலும், மாவட்ட நீதிபதியின் முடிவு… மிகவும் கேள்விக்குரியது, குறிப்பாக நீதிபதியின் கடைசி நாளாக இருந்தபோது. சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஏ.எஸ்.ஐ அறிக்கையின் ஒருதலைப்பட்சமான வெளிப்பாடும் சமமாக உள்ளது. முக்கியமாக, இந்த அறிக்கை வெறும் கூற்று மட்டுமே என்று தலைவர்கள் தெரிவித்தனர்.

மதுராவின் ஷாஹி ஈத்கா, டெல்லி சுனேஹ்ரி மஸ்ஜித் போன்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான மசூதிகள் மற்றும் வக்ஃப் சொத்துக்கள் மீது தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்படுவதால், பிரச்சினை ஞானவாபி மசூதிக்கு அப்பால் நீண்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர். 

“பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மீதான தேவையற்ற உரிமைகோரல்களின் இந்தப் போக்கு தீவிர கவலைகளை எழுப்புகிறது. 1991-ம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து மௌனம் சாதிப்பது, நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், இந்தக் கவலைகளைத் தெரிவிக்க இந்தியக் குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேச நேரம் கோரியுள்ளோம்.  இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அவரால்  நடவடிக்கை எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளை இந்திய தலைமை நீதிபதிக்கு மரியாதைக்குரிய மற்றும் பொருத்தமான முறையில் தெரிவிக்க உள்ளோம்” என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா சையத் அர்ஷத் மத்னி, டெல்லி ஜமா மஸ்ஜித் முதல் அகமதாபாத், சம்பல், மதுரா போன்ற வழிபாட்டுத் தலங்கள் வரை மசூதிகள் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/gyanvapi-row-muslim-outfits-question-hurry-shown-in-initiating-puja-to-approach-president-9141546/?tbref=hp

ஞானவாபியின் தெற்கு அடித்தள அறையில் பூஜைக்கு அனுமதி அளித்த உத்தரவு நீதித்துறையின் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மாலிக் மொஹத்சிம் கான் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

 

Gyanvapi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment