சுக்பிர் சிவச்
The other Chautalas in Haryana Election: துஷ்யந்த் சௌதாலாவின் ஜன்நாயக் ஜனதா கட்சி தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில் அக்கட்சி ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் 87 இடங்களில் போட்டியிட்டு தன்னை பலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், அக்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய வேட்பாளர்கள் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மற்ற கட்சியினருக்கு முக்கிய போட்டியாளர்களாராக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சௌதாலா குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான பிளவுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்து முறையாகப் பிரிந்தடைத் தொடர்ந்து, துஷ்யந்த் சௌதாலா எம்.பி 2018 ஆம் ஆண்டில் ஜன்நாயக் ஜனதா கட்சியை நிறுவினார். ஹரியானாவில் உள்ள ஜிந்த் இடைத் தேர்தலில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியைவிட ஜன்நாயக் ஜனதா கட்சி சிறப்பாக செயல்பட்டது. இந்த தேர்தலில் பாஜகவின் கிரிஷன் மிதா ஜன்நாயக் ஜனதா கட்சி வேட்பாளர் திக்விஜய் சௌதாலாவை 12,395 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்கடித்தார். ஆனால், இந்திய தேசிய லோக் தளம் கட்சி வேட்பாளர் உமேத் ரேது வெறும் 3,454 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், அனைத்து இடங்களும் பாஜகவுக்குச் சென்றபோதும், ஜன்நாயக் ஜனதா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்தது. இந்திய தேசிய லோக் தளம் கட்சி எதிலும் முன்னிலை வகிக்கவில்லை. இந்திய தேசிய லோக் தளம் பல வெறுமைகளை சந்தித்தது. அதே நேரத்தில், ஜன்நாயக் ஜனதா கட்சி பல உள்ளூர் தலைவர்களை ஈர்த்தது
இப்போது ஜன்நாயக் ஜனதா கட்சி ஹரியானாவில் வலுவான அரசியல் சக்தியாக எழுவதற்கு முயற்சிக்கிறது. “சவுத்ரி தேவி லால்-ஐ பின்பற்றுபவர்களில் 90 சதவீதம் பேர் ஏற்கனவே ஜன்நாயக் ஜனதா கட்சிக்கு மாறிவிட்டனர். ஹரியானாவில் உள்ள மக்கள் தேவி லாலின் கொள்கைகளையும் கொள்கைகளையும் இன்னும் நம்புகிறார்கள். பாஜக மற்றும் காங்கிரசுடன் ஜன்நாயக் ஜனதா கட்சி முக்கிய போட்டியில் உள்ளது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. பங்கர் கூறினார்.
சௌதாலா குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு இந்திய தேசிய லோக் தளம் கட்சியை அழித்துவிட்டது. கட்சியில் பலரின் விலகல்களை சந்தித்தது. ஜிந்த் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஜன்நாயக் ஜனதா கட்சி செயல்திறனுடன் உள்ளூர் தலைவர்களை ஈர்த்தது. அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜன்நாயக் கட்சிக்கு ஆதரவாக ஜாட் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டால், அது இந்திய தேசிய லோக் தளத்தின் புகழில் ஹரியானாவின் வலுவான பிராந்திய கட்சியாக இருக்கும்.
கீழே உள்ள இணைப்பில் இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கலாம்:
https://indianexpress.com/elections/haryana-polls-the-other-chautalas-after-bitter-split-jjp-eyes-inld-votes-6061467/
இளம் தலைவர்களான துஷ்யந்த் மற்றும் அவரது சகோதரர் திக்விஜய் ஆகியோரின் கைகளில், ஜன்நாயக் ஜனதா கட்சி ஒரு உயர் தொழில்நுட்ப கருத்துக் கணிப்பு பிரச்சாரத்தைத் தேர்ந்தெடுத்து, இளம் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக வைத்து கட்சிக்கு நவீன கண்ணோட்டத்தை கொடுக்க முயன்றது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் ஜிந்த் மாவட்டத்தின் உச்சனா கலான் தொகுதியில் இருந்து துஷ்யந்த் போட்டியிடுவார். அங்கு அவர் மாநிலங்களவை எம்.பி. பிரேந்தர் சிங்கின் மனைவி மற்றும் எம்.எல்.ஏ பிரேம் லதாவை எதிர்கொள்கிறார். அவரது தாத்தா மற்றும் முன்னாள் துணை முதல்வர் தேவி லால் ஆகியோரின் தடங்களைத் தொடர்ந்து, அங்கே விவசாயிகளின் தலைவராக வெளிப்படும் முயற்சியைத் தவிர, தேர்தல் நேரத்தில் வெளிச்சத்தில் இருக்க இது ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
துஷ்யந்தின் தாய் நைனா சௌதாலா பத்ராவில் களமிறக்கப்பட்டுள்ளார். அங்கே அவர், பாஜக எம்.எல்.ஏ சுக்விந்தர் மண்டி மற்றும் முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மகனான காங்கிரஸ் ரன்பீர் மஹிந்திரா ஆகியோரை எதிர்கொள்வார்.
பாஜக மாநிலத் தலைவர் சுபாஷ் பராலா மற்றும் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவின் நெருங்கிய கூட்டாளியான காங்கிரஸின் பரம்வீர் சிங் ஆகியோருக்கு எதிராக ஜன்நாயக் ஜனதா கட்சி ஃபதேஹாபாத் மாவட்டத்தின் தோஹானா தொகுதியில் தேவேனர் பாப்லியை களமிறக்கியுள்ளது. அங்கே அது அதிக நம்பிக்கையை கொண்டுள்ளது. பாப்லி காங்கிரஸ் சீட்டுக்காக ஆசைப்பட்டார். ஆனால், ஒரு பெரிய பழைய கட்சியை மறுத்து பின்னர் வெளியேறினார்.
குஹ்லா சீகா தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஈஸ்வர் சிங்கை நிறுத்தியுள்ள ஜன்நாயக் ஜனதா கட்சிக்கு அந்த தொகுதியின் மீதும் கண்கள் உள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு துஷ்யந்த் உடன் கைகோர்த்த சில மணி நேரங்களிலேயே கட்சி அவருக்கு சீட் கொடுத்தது.
இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளராக ஹிசார் மாவட்டத்தின் உக்லானா தொகுதியில் இருந்து 2014 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனூப் தனக், இந்த முறை ஜன்நாயக் ஜனதா கட்சி வேட்பாளராக உள்ளார். "காங்கிரஸ் அதிருப்தியாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நரேஷ் செல்வால் ஒரு சுயேச்சை வேட்பாளராக இந்த இடத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டால், அது காங்கிரஸ் வேட்பாளர் பாலா தேவியின் வெற்றி வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த சூழ்நிலைகளில், நாங்கள் இந்த இடத்தை வெல்லலாம்”என்று ஒரு ஜன்நாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறினார்.