கடந்த சில மாதாங்களாகவே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய அமைச்சகம் கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்எம்எல் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டார்.
ஆனால், இம்முறை அமைச்சரின் வருகை குறித்தும், காரணம் குறித்தும் மருத்துவமனைகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. மருத்துவர்கள், நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது மட்டுமின்றி அண்மையில் சோதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கப்பட்டுள்ள OPD செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
காலி இருக்கை
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் ஐந்து மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் பணி தயாராகிவருகிறது. எதிர்க்கட்சிகள் பல முறை இந்த பிரச்சினையை எழுப்பிய போதிலும், காலியாக உள்ள பதவிக்கு நபரை தேர்ந்தெடுக்க ஆளும் பாஜக அரசு முனைப்பு காட்டவில்லை.
2019 தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 17 வது மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பதாக, அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதவி காலியாக இருப்பது அரசியலமைப்பின் பிரிவு 93 ஐ மீறும் செயல் ஆகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித முடிவையும் பாஜக எடுக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலையீடு
மூத்த தலைவர் லூய்சின்ஹோ ஃபெலிரோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததை தொடர்ந்து, கோவா காங்கிரஸில் மற்றொரு தலைவரான அலெக்ஸோ ரெஜினல்டோ லாரென்கோவும் கட்சியை விட்டு வெளியேறலாம் என்ற சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது வெளியேறுதலை தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.கோர்டிம் எம்எல்ஏ லூரென்கோவை நேற்று கோவா காங்கிரஸின் செயல் தலைவராக நியமித்தது.
லாரென்கோ ஆம் ஆத்மி கட்சியில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஏஏபியின் ஆறு தலைவர்கள் கடந்த வாரம் காங்கிரசில் இணைந்தனர். இது லோரன்கோவை தனது திட்டங்களை மாற்ற தூண்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.
முதலமைச்சரின் புத்தகம்
2018 ஆம் ஆண்டில் பதவியேற்று ஒரு வருடம் கழித்து, திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப், மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் டெப்பர்மன் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் 1923 மற்றும் 1947 க்கு இடையில் இந்திய தொழிற்சங்கத்தில் சேருவதற்கு முன்பு திரிபுராவை ஆண்ட டெப்பர்மனின் பயணத்தை கூறுகிறது.
அடுத்த கல்வியாண்டு முதல் 5 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை சேர்க்கும் சாத்தியத்தை பாஜக தலைமையிலான மாநில அரசு ஆராய்ந்து வருகிறது இளைஞர்களின் மனதை ஊக்குவிக்கும் வகையில் வாக்கியங்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil