New Update
/indian-express-tamil/media/media_files/6To13T7xPJoGjbT2mOoP.jpg)
சுற்றுலா சென்ற வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மூணார் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
சுற்றுலா சென்ற வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மூணார் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
கேரள மாநிலம் மூணாறில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூணாறு மறையூர் பகுதிகளில் உள்ள பாம்பாறு லக்கம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மூணாறில் இருந்து உடுமலை வரும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டது இதேபோல் மூணாறில் இருந்து கொச்சி மற்றும் தேனி செல்லும் சாலைகளும் நிலச்சரிவில் பெரிய அளவில் சேதம் அடைந்து எந்தவித வாகனங்களும் செல்ல முடியாமல் உள்ளது. சுற்றுலா சென்ற வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மூணார் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
உடனடியாக இடுக்கி மாவட்ட மீட்பு படையினர் விரைந்து வந்து சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மூணாறு ராஜமலை எஸ்டேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பேரிடர் மீட்பு படையினர் விரைந்து மூணாறு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.