Advertisment

அமலாக்கத்துறை வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்

அமலாக்கத்துறை வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்கண்ட் ஐகோர்ட்; விரைவில் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு

author-image
WebDesk
New Update
hemant soren

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Abhishek Angad

Advertisment

சட்டவிரோதமாக 8.36 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. ஹேமந்த் சோரன் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாத நிலையில், அவர் சிறையில் இருந்து வெளி வர வாய்ப்புள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கினார்.

அட்வகேட் ஜெனரல் ராஜீவ் ரஞ்சனின் இணை வழக்கறிஞர் பியூஷ் சித்ரேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “தலா 50,000 ரூபாய்க்கு இரண்டு உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரிலீஸ் ஆணை பெறுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினார்.

ஹேமந்த் சோரன் இந்த வழக்கில் ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார், விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்து, விசுவாசி மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சரான சம்பாய் சோரனை முதல்வராக நியமித்தார்.

ஜார்க்கண்டில் ராஞ்சியில் ராணுவ நிலத்தை சட்டவிரோதமாக விற்றது மற்றும் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் தான், பார்கெய்ன் சர்க்கிள் அலுவலக முன்னாள் வருவாய் துணை ஆய்வாளர் பானு பிரதாப் பிரசாத் பெயர் வந்தது.

இறுதியில் கைது செய்யப்பட்ட பானு பிரதாப் பிரசாத், சட்ட விரோதமாக, நிர்பந்தமாக, அரசாங்கப் பதிவுகளை பொய்யாக்கி சொத்துக்களைப் பெற்றதில் ஈடுபட்ட சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக இருந்ததாக அமலாக்கத்துறை கூறியது.

அவரிடமிருந்து பல அசல் நில ஆவணங்கள் மீட்கப்பட்டன, மேலும் அவரது தொலைபேசியில் ஹேமந்த் சோரனின் சட்டவிரோத உடைமையில் இருந்ததாகக் கூறப்படும் 8.36 ஏக்கர் நிலத்தின் படம் இருந்தது.

அமலாக்கத்துறையின்ன் படி, பிரதாப் "முறைகேடுகளை செய்து" சொத்துக்களை கையகப்படுத்த பிறருக்காக உதவியவர்களில் ஹேமந்த் சோரனும் ஒருவர். பிரதாப்பின் மொபைல் போனில் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்பட்ட / உடைமையாக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்று தவறாகக் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறி, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று ஹேமந்த் சோரன் கூறினார். அந்த நிலம் உண்மையில் ‘புயின்ஹாரி’ நிலம் என்றும், சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் கீழ் இதை யாருக்கும் மாற்ற முடியாது என்றும் ஹேமந்த் சோரன் கூறினார்.

கடந்த மாதம், ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், அரசியல் பழிவாங்கலை மேற்கோள் காட்டி, ஹேமந்த் சோரன் "தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து வெளியேற முடியாது" என்று கூறியது, மேலும் அவரது சம்மன் மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

அவரும் அவரது கட்சியினரும் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எதிரான பா.ஜ.க.,வின் "பழிவாங்கும் நடவடிக்கையின்" ஒரு பகுதிதான் அவரது கைது என்று ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அனுமதிக்க முடியாத "மோசடி" விசாரணைக்கு அமலாக்கத்துறை முயற்சிப்பதாக முன்னதாக கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jharkhand Cm Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment