Advertisment

தாய் மொழியுடன், இந்தியையும் வளர்ப்போம் - அமித் ஷா

அரசியல் சாசன நிர்ணய சபை மூலம் 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி இந்தி அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: 2 முக்கிய மசோதாக்கள் வேளாண் வளர்ச்சிக்கான தொடக்கம் - அமித் ஷா

hindi should be developed by all along with their mother tongue says Amit Shah : 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி இந்தியாவில், இந்திய மொழிக்கு அலுவல் மொழி அந்தஸ்த்து கிடைத்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்நாளை இந்தி தினமாக கடைபிடித்து வருகின்றனர். இந்தி மொழி தினத்திற்காக ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Advertisment

அந்த ட்வீட்டில்,  இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில் அனைவரும் அவர்களின் தாய்மொழிகளுடன் இந்தி மொழியின் வளர்ச்சிக்கும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தி தினத்திற்கு வாழ்த்துகள் கூறி பிரதமர் நரேந்திர மோடியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் இந்தி மொழியின் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்றிகளை பதிவு செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment