எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை; நிதிஷ், தேஜஸ்வி-ஐ சந்தித்த பின் ராகுல் பேட்டி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை புதுதில்லியில் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி; எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய நடவடிக்கை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை புதுதில்லியில் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி; எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய நடவடிக்கை

author-image
WebDesk
New Update
opposition-leaders

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் JD (U) தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோருடன் புதுதில்லியில், புதன்கிழமை, ஏப்ரல் 12, 2023. (PTI புகைப்படம்)

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு எதிரான சித்தாந்தப் போரில் அனைத்துக் கட்சிகளையும் காங்கிரஸ் கட்சி அழைத்துச் செல்லும் என்று வலியுறுத்தினார்.

Advertisment

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை புதுதில்லியில் சந்தித்துப் பேசிய பிறகு ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.

இதையும் படியுங்கள்: பா.ஜ.க சீனியர்களுக்கு சீட் இல்லை: கர்நாடகாவில் வெடித்த போராட்டம்

Advertisment
Advertisements

“எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை இது. எதிர்க்கட்சிகளின் பார்வையை வளர்த்துக்கொண்டு முன்னேறுவோம். நாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம் என்று ராகுல் காந்தி கூறினார்.

publive-image
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஜே.டி (யு) தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள கார்கேயின் இல்லத்தில், ஏப்ரல் 12, 2023 புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். (PTI புகைப்படம்)

இதற்கிடையில், "நாங்கள் முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் ஒன்றாக வேலை செய்வோம்," என்று நிதிஷ் குமார் கூறினார்

பீகாரில் ஜே.டி.யு, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியில் உள்ளன, மேலும் பா.ஜ.க.,வுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற எதிர்க்கட்சிகளை ஒரு பொது மேடையில் கொண்டு வர ஆர்வமாக உள்ளன.

publive-image
publive-image

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய மல்லிகார்ஜூன கார்கே, “இன்று நாங்கள் இங்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நடத்தினோம், மேலும் பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அனைத்து (எதிர்க்கட்சி) கட்சிகளையும் ஒன்றிணைத்து, வரவிருக்கும் தேர்தலில் ஒற்றுமையாக போராட அனைவரும் முடிவு செய்துள்ளோம்,” என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை டெல்லி வந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய தலைநகர் டெல்லியில் தங்கியிருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரையும் அணுகியுள்ளார், மேலும் வரும் வாரங்களில் உயர்மட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடைபெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tejashwi Yadav Rahul Gandhi Congress Nitish Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: