மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வரிசையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனை அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்ததால் நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவு மீண்டும் தொற்று உறுதி என்று வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி டுவீட்
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில்
அதே போல, தமிழகத்தில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news