'விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' - இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் பற்றி டிரம்ப் கருத்து

விரைவில் முடியும் என நம்புகிறேன் என்று பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்திலேயே டிரம்ப் இதனை கூறி உள்ளார்.

விரைவில் முடியும் என நம்புகிறேன் என்று பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்திலேயே டிரம்ப் இதனை கூறி உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hope it ends very quickly

'விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' - இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் பற்றி டிரம்ப் கருத்து

காஷ்மீரின் பஹல்காமில் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு, இந்திய ராணுவன்'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற ஆப்ரேஷன் மூலம் தீவிரவாத இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்திலேயே, அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்த மோதல்  விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்" என்றார்.

Advertisment

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறுகையில், இது அவமானகரமானது. வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போதுதான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து அறிந்தோம். கடந்தகாலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்' என்றார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Hope it ends very quickly, says Trump

Advertisment
Advertisements

இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது: "தாக்குதல்களுக்குப் பிறகு, என்.எஸ்.ஏ அஜித் தோவல் அமெரிக்க என்.எஸ்.ஏ மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் பேசினார்.

இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மூத்த இந்திய அதிகாரிகள் பல நாடுகளில் உள்ள தங்களது பிரஜைகளுடன் பேசியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் கூறியது: காஷ்மீரில் ஏப்.22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் தெளிவான ஈடுபாட்டை சுட்டிக்காட்டும் நம்பகமான தடயங்கள், தொழில்நுட்ப உள்ளீடுகள், உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன.

பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் உள்கட்டமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதிலாக, கடந்த 15 நாட்களில், பாகிஸ்தான் மறுப்பில் ஈடுபட்டுள்ளது மற்றும் இந்தியாவுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது" என்று தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்தியாவின் நடவடிக்கைகள் கவனமாகவும் துல்லியமாகவும் உள்ளன. அவை அளவிடப்பட்டன, பொறுப்பானவை மற்றும் விரிவாக்கம் இல்லாதவையாக வடிவமைக்கப்பட்டன. பாக்கிஸ்தானிய மக்கள், பொருளாதார அல்லது ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை. அறியப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன" என்று இந்திய தூதரகம் கூறியது.

Operation Sindoor Us President Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: