Advertisment

அனல் மேல் நிற்கும் பனித்துளி... பிரபல நடிகை மீது பதிவான வழக்கு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Divya Spandana

Divya Spandana

Divya Spandana : பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் துணிச்சலாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளார்.

Advertisment

கன்னடா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்த ரம்யா என்னும் திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினராவார். இவர் கர்நாடகா மாண்டியா தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2014-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியுற்று தற்போது காங்கிரஸின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.

Divya Spandana : நடிகை திவ்யா மீது வழக்கு பதிவு :

இந்நிலையில் ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சையது ரிஸ்வான் என்ற வழக்கறிஞர் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தார்.

தேசத்துரோக வழக்கு பதிவு செய்தாலும் அசராமல் தற்போது மீண்டும் மோடியை திருடன் என்று நடிகை ரம்யா குறிப்பிட்டுள்ளார். இது பாஜகவினரிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bjp All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment