Advertisment

’அபத்தமானது… இந்து பட்ஜெட், முஸ்லிம் பட்ஜெட் என்று எப்படி இருக்க முடியும்’: மோடியின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதில்

காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்காக பட்ஜெட்டில் 15% ஒதுக்க விரும்புகிறது – மோடி; இந்துக்களுக்கு ஒன்று, முஸ்லீம்களுக்கு ஒன்று என இரண்டு பட்ஜெட்டுகள் எப்படி இருக்க முடியும்? – ப.சிதம்பரம் கேள்வி

author-image
WebDesk
New Update
P Chidambaram

ப.சிதம்பரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிறுபான்மையினருக்காக மத்திய பட்ஜெட்டில் 15% ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் விரும்புகிறது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வியாழன் அன்று மோடியின் கருத்துக்கள் “அபத்தமானது” மற்றும் “தவறானது” என்று கூறினார்.

Advertisment

"கடந்த 75 ஆண்டுகளாக, நாம் அனைவரும் அறிவோம், ஒரே ஒரு வருடாந்திர நிதிநிலை அறிக்கை மட்டுமே உள்ளது. அப்படியென்றால், இந்துக்களுக்கு ஒன்று, முஸ்லீம்களுக்கு ஒன்று என இரண்டு பட்ஜெட்டுகள் எப்படி இருக்க முடியும்? இது அபத்தமானது. இது பொய். பா.ஜ.க ஏன் மாயத்தோற்றம் செய்கிறது?” என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

"இது விசித்திரமானது. வெளிப்படையாக, அவரது (பிரதமர் மோடியின்) பேச்சை எழுதிக் கொடுப்பவர்கள் தங்கள் சமநிலையை இழந்துவிட்டனர். நீங்கள் எப்படி இந்து பட்ஜெட் மற்றும் முஸ்லீம் பட்ஜெட்டை வைத்திருக்க முடியும், மேலும் எதிர்காலத்தில் நீங்கள் கிறிஸ்தவ பட்ஜெட் அல்லது சீக்கிய பட்ஜெட் வைத்திருப்பீர்களா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு தெளிவான சட்டப்பிரிவு உள்ளது, அது 112வது பிரிவு, இது ஒரு அரசாங்கம் ஆண்டுக்கு ஒருமுறை, வருடாந்திர நிதிநிலை அறிக்கை (AFS) எனப்படும் வரவுகள் மற்றும் செலவுகளின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது," என்று ப.சிதம்பரம் கூறினார்.

மோடி புதன்கிழமை, “அவர்கள் (காங்கிரஸ்) சிறுபான்மையினருக்காக பட்ஜெட்டில் 15% ஒதுக்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். குஜராத் முதல்வர் என்ற முறையில் நான் அதை கடுமையாக எதிர்த்தேன். அதை பா.ஜ.க அனுமதிக்கவில்லை. டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்தார்,” என்று கூறினார்.

மேலும் “காங்கிரஸ் கட்சியால் சிறுபான்மையினரை வாக்கு வங்கி என்பதைத் தாண்டி பார்க்க முடியாது. சிறுபான்மையினருக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு கோருகின்றனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுமோசமாக தோற்கப் போகிறது,” என்று வடக்கு மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pm Modi P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment