மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற ஹவுரா ரயிலின் 3 பெட்டிகள் இன்று அதிகாலை மகாராஷ்டிரா அருகே தடம் புரண்டது.
மும்பை ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி 12840 என்ற எண் கொண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. மும்பையில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்த ரயில், மகாராஷ்டிராவில் இகாத்புரி ரயில்வே நிலையத்தை நெருங்கியபோது ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது.
June 2018
இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ரயில் தடம் புரண்ட வழியாக செல்லும் 12 ரயில்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
June 2018