Advertisment

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன்; நிதிஷ் குமார்

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் ராஜ் பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

author-image
WebDesk
New Update
bihar nitish

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நிதீஷ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நிதீஷ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பீகார் அரசியல் நெருக்கடி

பல நாட்கள் ஊகங்களுக்குப் பிறகு, ஜேடி(யு) தலைவர் நிதீஷ் குமார் இன்று ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

18 மாதங்களுக்கும் குறைவான நேரத்தில் அவரது இரண்டாவது பதவி காலத்தில் ராஜினாமா செய்துள்ளார். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ், தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார். மாலை 4 மணிக்கு பதவியேற்பு நடக்கிறது.

Advertisment

நிதிஷ் குமார் பேட்டி

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நிதிஷ் குமாரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் எதிர்கட்சியான இந்தியா கூட்டணி அணிக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

இது குறித்து ராஜ் பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், “நான் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன், இந்த அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டேன். கட்சி தலைவர்கள் எனக்கு அறிவுரை கூறினர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு ராஜினாமா செய்துவிட்டேன். நிலைமை நன்றாக இல்லை. எனவே, நாங்கள் உறவுகளை முறித்துக்கொண்டோம், ”என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், ”நான் நிறைய பணியாற்றிக் கொண்டிருந்தேன். கூட்டணி அமைக்க முயற்சி செய்தும், எதுவும் செய்யவில்லை. எனவே, நான் இதை முடிவு செய்தேன்“ என்றார்.

காங்கிரஸ் கருத்து

கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரண்டு அல்லது மூன்று முறை நிதிஷை தொடர்பு கொள்ள முயன்றும் இருவரும் இணைக்க முடியவில்லை என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

பீகாரில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற செய்திகளுக்கு மத்தியில், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலை சிறப்பு பார்வையாளராக பாட்னாவுக்கு விரைந்து செல்ல கட்சி முடிவு செய்தது.

சட்டப்பேரவை பலம்

JD(U) இன் தேர்தல் தடம் சுருங்கினாலும் (தற்போது RJD மற்றும் BJP க்கு அடுத்தபடியாக பீகார் சட்டசபையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது) அவரது பேரம் பேசும் சக்தி பல ஆண்டுகளாக குறையவில்லை.

பா.ஜ.,வில் இருந்து விலகிய போதும், சிவசேனாவைப் போல் அல்லாமல் தன் கட்சி பிளவுபடாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது.

ஆர்ஜேடி (79), காங்கிரஸ் (19), மற்றும் மூன்று இடதுசாரிக் கட்சிகள் (16) இணைந்து 114 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளனர்.

243 பேர் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு 8 பேர் குறைவாக உள்ளனர். ஜேடி(யு) வின் 45 எம்எல்ஏக்கள் மற்றும் பிஜேபியின் 78 பேர். ஒரு சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவு, மொத்தம் 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : ‘I have left INDIA bloc… things were not working out’: Nitish Kumar after resigning as Bihar CM

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nitish Kumar Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment