/tamil-ie/media/media_files/uploads/2023/08/cats-2.jpg)
மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கர், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மாநிலங்களவையில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்தன.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ஜகதீப் தாக்கரிடம் ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, திருமணமாகி 45 வருடங்கள் ஆனதால் அதை ஒருபோதும் செய்வதில்லை என்று பதிலளித்தார்.
இதனால் அவையில் உறுப்பினர்கள் சிரித்தனர். இதற்கிடையில், கார்கே தனது கோபத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அப்போது கார்கே, “ஆப் குஸ்ஸா நஹி கர்தே. தேகதே நஹி. லேகின் பராபர் அந்தர் சே கர்தே ஹோ (நீங்கள் உங்கள் கோபத்தைக் காட்டவில்லை, ஆனால் உள்ளிருந்து, நீங்கள் கோபப்படுகிறீர்கள்)" என்றார். இது அவையில் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.