விமானம் 12.25 மணிக்கு புறப்பட்டும் இதுவரை மெச்சுகா விமானத் தளத்துக்குச் வந்து சேரவில்லை. 13.00 மணிக்கு அது இலக்கை சென்றடைந்திருக்க வேண்டும். இந்த மெச்சுகா விமானப்படைத் தளம் இந்திய – சீன எல்லையான மெக்மோகன் லைன் அருகே அமைந்துள்ளது. விமானம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்பதால் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் Sukhoi-30MKI, C-130 ரக விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
ஆண்டோனோவ் An-32 ரக விமானம், 1984 முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம்பிக்கையான விமானமாக An-32 ரக விமானம் இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது.