மதப் பிளவு இந்தியாவின் ஐ.டி. தலைமையை அழிக்கும்: கிரண் மஜூம்தார் ஷா வேதனை!

“கர்நாடகம் எப்போதும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது, இதுபோன்ற வகுப்புவாத பிளவை நாம் அனுமதிக்கக் கூடாது”- கிரண் மஜூம்தார் ஷா

“கர்நாடகம் எப்போதும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது, இதுபோன்ற வகுப்புவாத பிளவை நாம் அனுமதிக்கக் கூடாது”- கிரண் மஜூம்தார் ஷா

author-image
WebDesk
New Update
Bommai_Kiran-Mazumdar

If IT became communal it would destroy our global leadership says Kiran Mazumdar Shaw

கர்நாடகாவில் கோயில் திருவிழாக்களில் இருந்து முஸ்லிம் வியாபாரிகளை விலக்கி வைக்கும் இந்துத்துவா குழுக்களின் முயற்சிக்கு எதிராக இப்போது கார்ப்பரேட் குரல் எழுப்பியுள்ளது. பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா, மாநிலத்தில் "வளர்ந்து வரும் மதப் பிளவை" தீர்க்க முதல்வர் பசவராஜ் பொம்மையை வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

புதன்கிழமையன்று ட்விட்டரில், தி இந்தியன் எக்ஸ்பிரஸில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை ஷா குறிப்பிட்டு: "அமைதியின்மை அதிகரிக்கிறது, வணிகர்கள் அழுத்தத்தை ஒப்புக்கொள்கிறார்கள். “கர்நாடகம் எப்போதும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி வருகிறது, அத்தகைய வகுப்புவாத விலக்கத்தை நாம் அனுமதிக்கக் கூடாது. ஐடி வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும் என்று ஆசியாவின் முன்னணி பயோஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் ஷா எழுதினார்.

Advertisment
Advertisements

அந்த ட்வீட்டில், அவர் பொம்மையை டேக் செய்து, “இந்த வளர்ந்து வரும் மத பிளவை தயவுசெய்து தீர்க்கவும்” எங்கள் முதல்வர் மிகவும் முற்போக்கான தலைவர். அவர் விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முஸ்லீம் விற்பனையாளர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் பிரச்சாரம், எப்படி பல கோவில் நகரங்களில் பரவி’ பல உள்ளூர் வணிகங்களை மூடியது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திருவிழாக்களை ஏற்பாடு செய்யும் பல கோவில் கமிட்டிகள் தடைகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன, மேலும் இவை நீண்டகால சமூக உறவுகளை பாதிக்கலாம் என்று கூறுகின்றன.

மாநில அரசு கல்லூரிகளில் ஹிஜாப் தடையை, உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

முஸ்லீம் வணிகரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் துர்காபரமேஸ்வரி கோயிலின் நிர்வாகக் குழுத் தலைவர், முஸ்லிம் வணிகர்களை வெளியே வைத்திருக்க வேண்டும் என்ற விஎச்பியின் கோரிக்கையை நிராகரித்ததாகவும், ஆனால் அவர்கள் தங்களை ஒதுக்கிவைத்ததாகவும் கூறியதாக அறிக்கை மேற்கோள் காட்டியது.

கடந்த சில வாரங்களாக, விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் போன்ற குழுக்கள் தட்சிண கன்னடா மற்றும் ஷிவமொக்காவில் உள்ள கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்க முயன்றன.

கர்நாடகா அரசு இந்த வாரம் மாநில சட்டமன்றத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1997ன் கீழ் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விதியின்படி, கோயில் வளாகத்திற்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் வணிகம் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல விற்பனையாளர்கள் கூறுவது என்னவெனில் இந்த விதி, அவர்களை வெளியேற்ற ஆயுதம் ஏந்தியிருக்கிறது.

அதேநேரம் கோவில் வளாகத்திற்கு வெளியே பொது இடங்களில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Hijab Row Basavaraj Bommai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: