Advertisment

‘சைவ உணவு’ சாப்பிட தனி இடம் ஒதுக்கிய ஐ.ஐ.டி மும்பை; எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு அபராதம்

உணவு விடுதியில் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட தனி இடம் ஒதுக்கிய ஐ.ஐ.டி பாம்பாய்; எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிப்பு

author-image
WebDesk
New Update
iit bombay

ஐ.ஐ.டி பம்பாய்

Pallavi Smart 

Advertisment

இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை, வளாகத்தில் உள்ள மெஸ் கவுன்சில் ஒன்றில் சைவ உணவுக்கு மட்டும்’ தனியாக இடம் ஒதுக்கியதற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது.

ஆங்கிலத்தில் படிக்க: IIT-Bombay imposes fine on students who protested against ‘veg-only’ space

"இந்தச் செயல், மாணவர்கள் விவகாரங்களுக்கான கூடுதல் முதல்வர் வழங்கிய அறிவுரையை மீறி, உணவு விடுதிக்குள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாகும்..." என்று அக்டோபர் 1 ஆம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்ட ஹாஸ்டல் 12, 13 மற்றும் 14 மெஸ் கவுன்சில் கூட்டத்தின் அறிக்கைகள் கூறுகின்றன. கூட்டத்தில் அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த உணவு விடுதியைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மூன்று விடுதிகளின் மெஸ் கவுன்சிலால் 'சைவ உணவுக்கு மட்டும்' என தனி இடம் அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், செப்டம்பர் 28 அன்று இரவு உணவின் போது ஒரு சில மாணவர்களின் கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் மெஸ் விதிகளை மீறுவது குறித்த புகார்கள் குறித்து விவாதிக்க அந்தந்த விடுதிகளின் வார்டன்கள் மற்றும் இணை வார்டன்களுடன் மெஸ் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டது.

ஒரு நாள் முன்பு, விடுதி 12, 13 மற்றும் 14-ன் மெஸ் கவுன்சில் அதன் அனைத்து மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த உணவு விடுதியில் சைவ உணவுக்கு மட்டும் தனி இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. குறிப்பிட்ட 6 டேபிள்களில் சைவ உணவுகளை மட்டும் யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல், சர்ச்சையை கிளப்பியது. மெஸ் கவுன்சிலின் மின்னஞ்சலில், "அனைவருக்கும் மிகவும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான உணவு அனுபவத்தை உருவாக்குவது" என்று கூறியிருந்தாலும், வளாகத்தில் உள்ள சில மாணவர்களின் கூற்றுப்படி, இந்த அதிகாரப்பூர்வ பிரிப்பு தேவையற்றது மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு எதிரானது.

வியாழன் அன்று இரவு உணவின் போது சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சைவ உணவுக்காக ஒதுக்கப்பட்ட ஆறு டேபிள்களில் ஒன்றில் அசைவ உணவுகளை சாப்பிட்டதால் உணவு விடுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

வளாகத்தில் இருந்து செயல்பட்டு வரும் முறைசாரா மாணவர்களின் கூட்டமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் (APPSC), அதன் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள கூட்டத்தின் அறிக்கையில், இப்போதைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவரின் நடத்தை "ஹாஸ்டல் 12, 13 மற்றும் 14 மெஸ் கவுன்சிலில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சூழலுக்கு எதிரானது" என்று மெஸ் கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அபராதத் தொகை மாணவரின் செமஸ்டர் மெஸ் அட்வான்ஸில் இருந்து கழிக்கப்படும், இது செமஸ்டரின் தொடக்கத்தில் செலுத்தப்பட்டிருக்கும்.

கூட்டத்தின் அறிக்கையில், குறைந்தது இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர், அவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரு நபர்களை அடையாளம் காண உதவுவதற்காக, விடுதி 12, 13 மற்றும் 14 கவுன்சில்களின் மாணவர் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற மெஸ் கவுன்சில் தீர்மானித்தது. அவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டதும், அவர்கள் மீதும் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட விடுதிகளின் மெஸ் கவுன்சில் அறிவிப்புக்கு எதிராக முதலில் குரல் எழுப்பிய APPSC, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, "நிர்வாகியின் கொடுங்கோல் முடிவை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் பிற்போக்கு கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்" என்று ட்வீட் செய்தது.

ஐ.ஐ.டி நிர்வாகம் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Iit Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment