Advertisment

கேரள அரசியலில் பரபரப்பு: முதலமைச்சர் மகள் மீது ரூ.1.92 கோடி பணம் பெற்றதாக புகார்

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மகள் வீணா ரூ.1.92 கோடி பெற்றதாக எழுந்துள்ள புகார் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Illegal payments of Rs 1 72 cr made to Kerala CMs daughter claims report triggers political firestorm

கேரள முதலமைச்சர் மகள் மீது ரூ.1.92 கோடி பணம் பெற்றதாக புகார்

கொச்சியைச் சேர்ந்த கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா ஆகியோர் தாக்கல் செய்த தீர்வு விண்ணப்பம் தொடர்பாக மத்திய வரிகள் வாரியத்தின் கீழ் தீர்வுக்கான இடைக்கால வாரியத்தின் அறிக்கை கேரள அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisment

அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடக நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா டிக்கு ரூ.1.72 கோடி முறைகேடாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் பினராய் விஜயன், முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த உம்மண் சாண்டி, மூத்தக் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்கள் பி.கே. குஞ்சாலுகுட்டி, வி.கே. இப்ராகிம் குஞ்சு உள்ளிட்டோர் பெயர்களும் உள்ளன.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் ஐயுஎம்எல் தலைவர்களும் தங்கள் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.

கனிம பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனமான CMRL க்கு எதிரான வழக்கு, 2019 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் வளாகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் இருந்து தொடரப்பட்டது.

அதன் நிர்வாக இயக்குனர் கர்த்தா மற்றும் பிற மூத்த நிறுவன அதிகாரிகள். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பல்வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்ட பணம் ஆகியவை தெரியவந்தது எனத் தெரிவித்தனர்.

2020 ஆம் ஆண்டில், CMRL மற்றும் கர்த்தா ஆகியவை 2013-14 முதல் 2019-20 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான தீர்வுக்கான விண்ணப்பத்தை புது டெல்லியில் உள்ள இடைக்கால தீர்வு வாரியத்தில் தாக்கல் செய்தன.

அப்போது, சிஎம்ஆர்எல் மற்றும் கர்த்தா ஆகியோர் வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் வழக்கு மற்றும் அபராதம் ஆகியவற்றில் இருந்து விலக்கு கோரினர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் அதன் அறிக்கையில், இடைக்கால தீர்வு வாரியம் CMRL மற்றும் கர்த்தா ஆகியோருக்கு விலக்கு அளித்தது,

வருமான வரித் துறை (ஐ-டி) கர்த்தா அதிக அளவில் கணக்கில் காட்டப்படாத பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது, மேலும் பல்வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்ட பணம் மற்றும் CMRL இன் வணிகத்திற்கு இடையே நேரடி தொடர்பைக் காட்டும் எந்த ஆதாரமும் பதிவில் இல்லை என்று கூறியது.

2013-14 மற்றும் 2019-20 க்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் பெற்றதாகக் கூறப்படும் ரூ.135 கோடி வெளிப்படுத்தப்படாத வருமானம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 95 கோடி ரூபாய், பல்வேறு நபர்கள் மற்றும் தரப்பினருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கர்தாவை மேற்கோள்காட்டி, "நிறுவனத்தை தினசரி அடிப்படையில் சுமூகமாக நடத்துவதற்கு பணம் செலுத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயனின் மகள் வீணா, 2017-18 முதல் 2019-20 வரை மென்பொருள் தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ரூ.1.72 கோடி பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சோதனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின்படி வீணாவின் நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், CMRL க்கு எந்த மென்பொருள் சேவையையும் வழங்கவில்லை என்று கூறப்பட்டதால், இந்த பணம் சட்டவிரோதமானது என்று அது கூறியது.

இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், CMRL ஆனது, எக்ஸாலாஜிக் நிறுவனத்துடன் மென்பொருளின் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்காக ஒரு சேவை அளவிலான ஒப்பந்தத்தை ரூ. 3 லட்சம் மாத ஊதியத்துடன் மேற்கொண்டது. 2017 ஆம் ஆண்டு முதல் 5 லட்ச ரூபாய் மாத ஊதியத்திற்கு சிஎம்ஆர்எல் வீணாவை ஆலோசகராக நியமித்ததைக் காட்டும் மற்றொரு ஆவணத்தை ஐடி கண்டறிந்துள்ளது.

பணம் செலுத்துவதைப் பற்றி, CMRL ஐ-டி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது,

வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சட்டவிரோதமாக பணம் செலுத்தியதாகக் கூறப்படும் மற்ற பெறுநர்களின் பெயர்கள் PV, OC, KK, IK, RC மற்றும் AG என சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

இந்த சுருக்கங்களை பினராயி விஜயன், உம்மன் சாண்டி, குன்ஹாலிக்குட்டி, இப்ராகிம் குஞ்சு, ரமேஷ் சென்னிதலா மற்றும் ஏ கோவிந்தன் என CMRL தலைமை நிதி அதிகாரி சுரேஷ் குமார் விளக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நபர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

நிறுவனம் சட்டவிரோதமாக பணம் செலுத்த முடியாது என்பதாலும், நிறுவனத்தின் பங்குதாரர்கள் அதை அனுமதிக்காததாலும், ரொக்கப் பணம் கர்த்தா செலுத்திய பணமாக மட்டுமே கருத முடியும் என்று அறிக்கை கூறியுள்ளது. ஐடி சட்டத்தின் 69சி பிரிவின் கீழ் சட்டவிரோதமான பணம் கர்த்தாவின் கையில் உள்ள விவரிக்கப்படாத செலவாக மதிப்பிடப்பட வேண்டும்.

விஜயன் மற்றும் வீணா குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சேவை வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்கள் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்துள்ளன. இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளின்படி பணம் செலுத்தப்பட்டது.

இது வங்கி மூலம் நடந்த பரிவர்த்தனை மற்றும் வெளிப்படையானது. தீர்வுக்கான இடைக்கால வாரியம் வீணை கேட்கவில்லை. அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் தங்கள் தொழில் செய்ய முழு உரிமையும் உண்டு. ஒரு நிறுவனத்துக்கும் வருமான வரித்துறைக்கும் இடையேயான பிரச்னை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

சிஎம்ஆர்எல் இயக்குநரும், கர்த்தாவின் மகனுமான சரண் எஸ் கர்த்தா, இந்த பிரச்சினைக்கும் விஜயனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குஞ்சாலிகுட்டி, “சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து தங்கள் கட்சி பணம் பெற்றிருந்தால், அது பதிவு செய்யப்படும். “நாங்கள் கட்சி நடத்துகிறோம். நான் கையில் பணம் எடுக்கவில்லை. கட்சி பணம் பெற்றிருந்தால், அது பதிவு செய்யப்படும். தொண்டு, ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பரம் ஆகியவை யதார்த்தங்கள். ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் மன்றங்களுக்கும் பணம் கிடைத்துள்ளது” என்றார்.

முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரின் பெயர்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், காங்கிரஸ் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.

காங்கிரஸ் மூத்த சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், அரசியல் கட்சிகள் வணிக நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுவதில் தவறில்லை. நிதி திரட்டுவதற்கு காங்கிரஸ் தலைவர்களை நியமித்தது, அந்த பணி கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே CMRL இன் கர்த்தாவிடம் பணம் பெற்றுள்ளனர், என்றார்.

இருப்பினும் வீணா தொடர்பான பிரச்சினை வேறு என்று சதீசன் கூறினார். வீணா மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராக பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், மாநிலத்தில் ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சியும் உள்ளது.

இந்த இருகட்சிகளும் மாத ஊதியத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. விஜயனின் அடிமை சுதீசன். இந்த விஷயத்தை சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Pinarayi Vijayan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment