Advertisment

மோடி செல்வாக்கின் நம்பிக்கையில் ஸ்மிருதி இரானி; சர்மாவுக்கு கை கொடுக்கும் காந்தி குடும்பம்; அமேதி தொகுதி நிலவரம்

ஸ்மிருதி இரானிக்கு எதிராக அதிருப்தி இருந்தாலும், அமேதி வாக்காளர்கள் அவரையோ அல்லது கே.எல்.சர்மாவையோ மனதில் வைத்து வாக்களிக்கவில்லை; மாறாக மோடியையும் காங்கிரஸையும் மனதில் வைத்து வாக்களிப்பதாக கூறுகிறார்கள்

author-image
WebDesk
New Update
amethi smriti and sharma

(இடமிருந்து வலம்) பா.ஜ.க.,வின் அமேதி வேட்பாளர் ஸ்மிருதி இரானி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து பிரச்சாரம் செய்கிறார்; கே.எல் ஷர்மாவுக்கு ஆதரவாக காங்கிரஸின் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். (PTI புகைப்படங்கள்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Maulshree Seth

Advertisment

அமேதிக்கும் வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு அல்லது வேட்பாளர் யாராக இருந்தால் என்ன?

ஆங்கிலத்தில் படிக்க: In Amethi, Modi factor keeps Smriti Irani afloat, Gandhi hand steadies aide’s boat

எல்.ஐ.சி முகவரான 68 வயது ராஜ் மூர்த்தி சிங்-க்கு, முரண்பாடு இல்லை. 2024 தேர்தல் போட்டியின் மையத்தில், தேர்தல் வரும்போது அனைவரின் கவனமும் இருக்கும் தொகுதியாக மாறும் அமேதி தொகுதி அதன் “வி.வி.ஐ.பி” நிலையை அறிந்திருக்கிறது. ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டு இருந்தால் ஏற்பட்டிருக்கும் களத்தின் விறுவிறுப்பு, தற்போது போட்டியில்லை என்பதால் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், மே 20 அன்று அமேதியில் வாக்களிப்பு முடிந்ததும், கேமராக்கள் திரும்பியதும், தொகுதி மென்மையான அமைதி நிலைக்குத் திரும்பும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த முறை போட்டி ஒரு புதிய முனையைக் கொண்டுள்ளது: "பியூன்" என்று அழைக்கப்படுபவருக்கும் ஒரு மத்திய அமைச்சருக்கும் இடையிலான யுத்தம்.

இங்கு காந்தியின் தேர்தல் பிரச்சாரங்களை 40 ஆண்டுகளாக நிர்வகித்து, பா.ஜ.க.,வால் "பியூன்" என்று அழைக்கப்பட்ட முகம் தெரியாத காங்கிரஸ் தேர்தல் மேலாளர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். மறுபுறம், ஸ்மிருதி இரானி தன்னைப் போராடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த அமைச்சராகக் காணப்படுகிறார், அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஷர்மாவின் காந்தி குடும்ப பக்தி அவரது வலிமையான மற்றும் பலவீனமான புள்ளிகள் என்றால், பா.ஜ.க தொண்டர்கள் ஸ்மிருதி இரானியின் "செல்வாக்கு" மற்றும் அது அவர்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதைப் பற்றி அமைதியான தொனியில் பேசுகிறார்கள்.

"மோடி மற்றும் யோகி (பிரதமர் மற்றும் முதல்வர்)" கீழ் சாலைகள் போன்ற வளர்ச்சிப் பணிகளைப் பற்றி பேசி, 2019 ஆம் ஆண்டு ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த பின்னர் ராகுல் காந்தி அமேதி தொகுதியை "கைவிட்டதாக" குற்றம் சாட்டுவதன் மூலம் அந்த கோபத்தை முறியடிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. அமேதியில் பிரியங்கா காந்தி வதேரா கூட பெரிதாக களத்தில் இல்லை என்பது பா.ஜ.க.,வுக்கு மற்றொரு சான்று.

இருப்பினும், பெரும்பாலும் இந்த கிராமப்புற தொகுதியில், ”வளர்ச்சிக்கான வாக்கு" அல்லது காந்தி குடும்ப வாக்குகள் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் "ராஷ்டிரா" அல்லது "நாடு” (அதாவது ஸ்மிருதி இரானிக்கு) வாக்களிக்கின்றனர் அல்லது "சிட்டிங் எம்.பிக்கு" எதிராக (எனவே, சர்மாவிற்கு) வாக்களிக்கின்றனர்.

Raj Murti Singh. (Express photo by Maulshree Seth)

ராஜ் மூர்த்தி சிங். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - மவுல்ஸ்ரீ சேத்)

அமேதிக்கு தேர்தலில் சிறிய பங்கு எப்படி உள்ளது என்பதைப் பற்றி பேசிய எல்.ஐ.சி முகவர் கூறுகிறார்: “அமேதி இருக்கும் இடத்திலேயே இருக்கும். நாங்கள் நாட்டுக்காக வாக்களிப்போம்.” அமேதியில் உள்ள கௌரிகஞ்ச் பகுதியில் உள்ள தனது சிறிய அலுவலகத்தில் 60 வயதுடைய நண்பர்கள் குழுவுடன் அமர்ந்திருக்கும் ராஜ் மூர்த்தி, தனது சொந்த ஊரின் "வி.வி.ஐ.பி" நிலையைப் பற்றி முன்பு உறவினர்களிடம் பெருமையுடன் பேசியதாகக் கூறுகிறார். "இப்போது அவர்கள் என்னை கேலி செய்கிறார்கள். யு.பி.ஏ ஆட்சியாக இருந்தாலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி, எதுவும் மாறவில்லை,” என்றும் அவர் கூறுகிறார். 

இது அமேதியில் இருந்து ஸ்மிருதி இரானியின் மூன்றாவது தேர்தல் ஆகும், 2014 இல் ராகுலிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 2019 இல் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி தீபக் சிங் கூறியதாவது: அமேதியில் தான் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை மட்டுமே ஸ்மிருதி இரானி ஏற்படுத்தி வருகிறார். மாறாக தொகுதிக்கு எப்போதாவதுதான் வருவார். மேலும், அவரது சொந்த கட்சி தலைவர்கள் அவரை வெளியேற்ற விரும்புகிறார்கள். அவர் பா.ஜ.க தலைவர்களை பகிரங்கமாக திட்டியது அல்லது மேடையில் இருந்து அவர்களை வெளியேற்ற உத்தரவிட்ட நிகழ்வுகள் உள்ளன.

ஸ்மிருதி இரானிக்கு எதிரான சில அதிருப்தியை ஒப்புக்கொண்ட பா.ஜ.க ஆதரவாளர், வேட்பாளர்களைத் தாண்டி "மோடி மற்றும் யோகிக்கு" வாக்களிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்துகிறார். “கே.எல் ஷர்மா புதியவர், அவருக்கு எதிராக எங்களிடம் எதுவும் இல்லை, அவர் காந்தி குடும்பத்தால் தியாகம் செய்யப்படும் ஆட்டுக்குட்டியாக ஆக்கப்பட்டுள்ளார். அவர் கடுமையான போட்டி அளித்தாலும், மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியென்றால் எங்கள் வாக்குகளை ஏன் வீணாக்க வேண்டும்? என்று அவர் மக்களிடம் கூறுகிறார்.

1985ல் முன்னாள் பிரதமரும் முன்னாள் அமேதி எம்.பி.,யுமான ராஜீவ் காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட பறக்கும் பள்ளியான இந்திரா காந்தி நேஷனல் உதான் அகாடமியின் நிழலில் கூட உணர்வுகள் வித்தியாசமாக இல்லை.

தேநீர் மற்றும் சிற்றுண்டி விற்கும் கடையை நடத்தும் ஷிவ் பியாரே, "காங்கிரஸுக்கு நல்ல அளவு வாக்குகள் கிடைக்கும்" என்று கூறுகிறார். காந்தி குடும்ப உறுப்பினர் போட்டியிட்டு இருந்திருந்தால் அது வேறுவிதமாக இருந்திருக்கும் என்றாலும், மக்கள் "உள்ளூர் எம்.பி.யின் நடத்தையால்" மகிழ்ச்சியடையாமல் இருக்கலாம், ஆனால் பெரிய காரணத்தின் மீது தங்கள் கண்களை வைத்திருப்பார்கள், எனவே (சர்மாவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்)" அவர்களின் வாக்குகளை வீண்டிக்க மாட்டார்கள்", ஷிவ் பியாரே கூறுகிறார்.

Shiv Pyare at his shop in Amethi. (Express photo by Maulshree Seth)

அமேதியில் உள்ள தனது கடையில் ஷிவ் பியாரே. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - மவுல்ஸ்ரீ சேத்)

வாக்குகள் எந்த வேட்பாளருக்கும் அல்ல, ஆனால் காங்கிரஸுக்கோ அல்லது மோடிக்கோ இருக்கும்" என்று ஷிவ் பியாரே கூறுகிறார்.

காங்கிரஸ் தனது பிரச்சாரத்தில், அமேதியில் யு.பி.ஏ ஆட்சியின் போது தொடங்கப்பட்டு என்.டி.ஏ ஆட்சியின் கீழ் தடுக்கப்பட்ட திட்டங்களை மேற்கோள் காட்டுகிறது, 'டிரிபிள் ஐ.ஐ.டி' 2016 இல் மூடப்பட்டு பிரயாக்ராஜுக்கு மாற்றப்பட்டது; மற்றும் 'மெகா ஃபுட் பார்க்' மற்றும் ஒரு காகித ஆலை, ஒருபோதும் வெளிச்சத்தைக் காணவில்லை. “பழிவாங்கும் அரசியல்” என்று கூறி, ராஜீவ் காந்தி காலத்தில் வந்த பி.ஹெச்.இ.எல், எச்.ஏ.எல், ஆர்டினன்ஸ் ஃபேக்டரி, சிமென்ட் ஆலை போன்ற திட்டங்களை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

அமேதியில் புதிய கோகோ கோலா பாட்டில் ஆலை பற்றி ஸ்மிருதி இரானி பேசுகிறார், மேலும் காந்தி குடும்பம் "50 ஆண்டுகள்" தொகுதியில் இருந்தபோதிலும், தனக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டு, மேலும் நேரம் தேடுகிறார். இப்போது அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு சொந்தமாக வீடு உள்ளது என்பதை அவரும் பா.ஜ.க.,வினரும் குறிப்பிடுகின்றனர்; மற்றும் விரைவில் பிரதமர் மோடி அமேதியில் திட்டமிடப்பட்ட பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

Vote shares in the Amethi Lok Sabha constituency.

மறுபுறம், காங்கிரஸின் அமேதி மற்றும் ரேபரேலி (ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி) பிரச்சாரங்களை பிரியங்கா பொறுப்பேற்றுள்ளார். பிரியங்கா ஏற்கனவே ஷர்மாவுடன் அமேதியில் 15க்கும் மேற்பட்ட "தெருமுனை சந்திப்புகளை" செய்திருப்பதால், அவரது நுழைவு காங்கிரஸ் பிரச்சாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அமேதியுடன் தனது குடும்பத்தின் பழைய தொடர்பை பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்துகிறார். ராஜீவ் காந்தியால் அமேதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மாவுக்கு தொகுதியின் ஒவ்வொரு பாதையும் தெரியும் என்கிறார் பிரியங்கா.

அமேதி போராட்டத்திற்கு தோள் கொடுத்தவர் ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்.

சர்மா தேர்தல் களத்தில் இறங்குவதற்கு முன் தன்னை ஒரு "பொது தொழிலாளி" என்று பேசுகிறார்: "காந்தி குடும்பத்தின் கதவுகள் கடந்த காலத்தைப் போலவே உங்களுக்குத் திறந்தே இருக்கும்.”

முந்தைய தேர்தல்களில் காந்தி குடும்பம் இருந்த முன்ஷிகஞ்ச் விருந்தினர் மாளிகையைப் போலல்லாமல், அவரது மனைவி கிரண் பாலா மற்றும் மகள் அஞ்சலி ஆகியோரின் உதவியுடன், காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் இருந்து சர்மா தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். காங்கிரஸின் "பெருமைமிக்க" நாட்களைப் பற்றி அவர் மக்களிடம் பேசுகையில், வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.

Krishnawati with her daughters in Gauriganj village. (Express photo by Maulshree Seth)

கௌரிகஞ்ச் கிராமத்தில் கிருஷ்ணவதி தனது மகள்களுடன். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - மவுல்ஸ்ரீ சேத்)

ராகுலுக்கு எதிரான அமேதியின் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது, 2019 தோல்விக்குப் பிறகு அவர் தனது குடும்பத்தின் தொகுதியைத் திரும்பப் பெற முயற்சிக்கவில்லை.

கௌரிகஞ்ச் நகரத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு தலித் குடும்பம், எந்த கட்சியிலிருந்தும் தங்கள் வாக்குகளை கேட்க யாரும் வரவில்லை என்று கூறுகிறார்கள். தாய் கிருஷ்ணாவதி, 55, பேசத் தயங்கும்போது, 8 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகக் கூறும் மகள் ரேகா, 30, “இந்து ஹைன், நாங்கள் இந்துக் கட்சிக்கு வாக்களிப்போம்” என்று அப்பட்டமாக கூறுகிறார். கிருஷ்ணாவதி அவரை வேகமாக அடக்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp Pm Modi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment