Advertisment

ஹிஜாப்; கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் கடைகளுக்கு அனுமதி மறுப்பு

ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் போராட்டம் நடத்திய நிலையில், கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களில் முஸ்லீம் கடைகளுக்கு அனுமதி மறுப்பு

author-image
WebDesk
New Update
ஹிஜாப்; கர்நாடகாவில் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் கடைகளுக்கு அனுமதி மறுப்பு

Kiran Parashar

Advertisment

In backdrop of hijab row, Muslim shopkeepers banned from temple fairs in coastal Karnataka: ஹிஜாப் விவகாரம் மத சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ள நிலையில், கடலோர கர்நாடகாவில், முஸ்லிம் கடைக்காரர்கள் உள்ளூர் வருடாந்திர திருவிழாவில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிவருகின்றன.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை விலக்க வேண்டும் என்று வலதுசாரி இந்துக் குழுக்களின் அழுத்தத்திற்கு இந்த திருவிழாவை ஏற்பாடு செய்யும் குழுக்கள் அடிபணிந்ததாகக் கூறப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ததையடுத்து, பல முஸ்லிம் கடைக்காரர்கள் போராட்டத்தின் அடையாளமாக கடைகளை மூடினர்.

வழக்கமாக ஏப்ரல்-மே மாதங்களில் கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் வருடாந்திர திருவிழாக்கள் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டுகின்றன. வகுப்புவாத பதற்றம் இருந்தபோதிலும், கடந்த காலங்களில் இத்தகைய திருவிழாக்கள் எந்தவொரு சமூகத்தின் வணிக வாய்ப்புகளையும் அரிதாகவே பாதித்தன. ஆனால் ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் அழைப்பு விடுத்த பந்த்க்குப் பிறகு, இப்பகுதியில் உள்ள பல கோவில்கள் அதன் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் நுழைவதைத் தடுக்கின்றன.

ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலின் ஆண்டு விழாவுக்கான ஏலத்தில் பங்கேற்க இஸ்லாமியர்களுக்கு திருவிழா ஏற்பாட்டாளர்கள் தடை விதித்துள்ளனர். அழைப்பிதழில், இந்துக்கள் மட்டுமே மார்ச் 31 ஆம் தேதி ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். கோயில் அதிகாரிகள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இதேபோல், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கௌப்பில் உள்ள ஹோசா மாரிகுடி கோவிலில் இந்த வாரம் நடக்கவுள்ள வருடாந்திர திருவிழாவிற்கு மார்ச் 18 அன்று நடைபெற்ற ஏலத்தில் முஸ்லிம்களுக்கு கடைகளை ஒதுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் ரமேஷ் ஹெக்டே கூறியதாவது: கடைகள் ஏலத்தில் இந்துக்கள் மட்டுமே பங்கேற்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்கள் கடைகளை அடைத்ததால் உள்ளூர் கோவில் வழிபாட்டாளர்கள் ஆத்திரமடைந்துள்ளதாக இந்து ஜாகரன வேதிகேவின் மங்களூரு பிரிவு பொதுச்செயலாளர் பிரகாஷ் குக்கேஹல்லி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ரஷ்யா – சீனா கூட்டணி இந்தியாவுக்கு நல்லதல்ல; பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவ தயார்; அமெரிக்க செயலர்

தட்சிண கன்னடா மாவட்டத்தில், பப்பநாடு ஸ்ரீ துர்காபமேஸ்வரி கோவிலின் வருடாந்திர உற்சவம் குறித்த அறிக்கையில், “சட்டத்தையோ, நிலத்தையோ மதிக்காதவர்கள், நாங்கள் பிரார்த்தனை செய்யும் பசுக்களை கொல்பவர்கள், ஒற்றுமைக்கு எதிரானவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம். ஹிந்துக்கள் விழிப்புடன் உள்ளனர். என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் என்.சஷி குமார் கூறுகையில், இந்த ஃப்ளெக்ஸ்களை பொருத்தியது யார் என்பதை கண்டுபிடித்து வருகிறோம். உள்ளூர் நிர்வாகம் புகார் அளிக்கத் தயாராக இருந்தால், நாங்கள் எங்கள் சட்டக் குழுவைக் கலந்தாலோசித்து அதன்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

உடுப்பி மாவட்ட தெருவோர வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் முஹம்மது ஆரிப் கூறுகையில், இதற்கு முன்பு இதுபோன்ற நிலை இருந்ததில்லை. “சுமார் 700 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 450 பேர் முஸ்லிம்கள். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு எந்த வியாபாரமும் இல்லை. இப்போது மீண்டும் சம்பாதிக்கத் தொடங்கும் போது, ​​கோவில் கமிட்டிகள் எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர்,'' என்றார்.

பஜரங் தள செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட சிவமோகாவில், செவ்வாய் கிழமை தொடங்கிய கோட்டே மரிகாம்பா திருவிழாவிற்கு முஸ்லிம் கடைக்காரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். கோவில் கமிட்டி தலைவர் எஸ்.கே.மாரியப்பா நிருபர்களிடம் கூறியதாவது, கமிட்டி கடந்த காலத்தில் ஒருபோதும் வகுப்புவாதமாக இருந்தது இல்லை, ஆனால் சமீபத்திய பிரச்சனைகள் காரணமாக, குறிப்பாக சமூக ஊடகங்களில் பலர் முஸ்லிம் கடைக்காரர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டனர், சுமூகமாக திருவிழாவை நடத்த முஸ்லீம்களுக்கான தடை கோரிக்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினர் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hijab Row Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment