உத்தரபிரதேசத்தில் பெண் நீதிபதுக்கு, நடைபெற்ற பாலியல் துன்புறுத்தலால், தனது வாழ்வை முடித்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பாக, பெண் நீதிபதி வகித்த பதவியில் உள்ள, மூத்த அதிகாரி அவரிடம் தவறான முறையில் நடந்துள்ளார். இந்நிலையில் தொடர் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியதால், அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு அனுமதி கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில் , இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சம் இல்லாத விசாரணை நடத்தப்படும் என்று நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இவர் எழுதிய கடிதம் 2 பக்கம் வரை உள்ளது, இதில் “ நீதித் துறையில், பெரும் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தேன். பொதுமக்களுக்கு உதவிகரமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நானே பிச்சைக்காரன் போல் நீதிக்காக அனைவரின் வீட்டின் முன்பு பிச்சை எடுக்கிறேன். நீதிமன்ற வளாகத்திலேயே என்னிடம் தவறாக நடந்து கொள்ள முடிகிறது “ என்று தெரிவித்துள்ளார்.
” என்னால் பொருத்துகொள்ளும் எல்லை வரை, என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்யப்பட்டது. நான் ஒரு குப்பை தொட்டியில் உள்ள வேண்டாத குப்பை போல் நடத்தப்பட்டேன். நான் ஒரு அருவருப்பான பூச்சி போல் உணர்கிறேன். நான் மற்றவர்களுக்கு நீதி பெற்றுத் தர போராடுகிறேன்.
என்னுடைய குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துகொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நேர்மையான விசாரணை தேவை என்றுதான் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய நபர், அவரை இரவு அழைத்ததால், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் இவர் மரணமடையவில்லை.
மேலும் அந்த கடிதத்தில், “ எனக்கு வாழ்வதற்கு என்று எந்த நம்பிக்கையும் இல்லை. கடந்த 1 ½ வருடங்களாக நான் நடை பிணமாக வாழ்ந்து வருகிறேன். இனி உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. மரியாதையான முறையில் நான் மரணமடைய அனுமதி கொடுங்கள்” என்று எழுதி உள்ளார்.
மேலும் அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது “ இந்த சிஸ்டத்திற்கு ( சமூதாய கட்டமைப்பு) எதிராக போராடலாம் என்று நினைக்கும் பெண்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டு என்று நினைக்கிறேன். என்னால் இந்த சமூதாய கட்டமைப்புக்கு எதிராக போராட்ட முடியவில்லை. நான் ஒரு நிதிபதியாக இருந்தபோதும் கூட, எனக்கு தேவையான நியாயமான விசாரணையை நடத்த முடியவில்லை. பெண்களே ஒரு விளையாட்டு பொம்மை போல் அல்லது உயிரற்ற பொருளாக இருக்க கற்றுகொள்ளுங்கள். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil