/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-20T194834.039.jpg)
ராட்சத அலையில் சிக்கி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்
புதுச்சேரியில் பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவிகள் உட்பட 4 பேர் மாயமானார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் உள்ள கடற்கரைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த லேகா(16) மற்றும் மேனகா(14) என்ற இரு மாணவிகள் மற்றும் கதிர்காமம் பகுதியை சேர்ந்த நவீன் (12) கிஷோர் (16) 2 இளைஞர் என 4 பேர் கடலில் குளித்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி மாணவிகள் இழுத்து செல்லப்பட்டனர்.அவர்களை காப்பாற்ற சென்ற இரண்டு இளைஞர்களும் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் குளித்த மாணவிகள் உள்பட 4 பேர் மாயமான சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.