Advertisment

சுதந்திர தின உரை: ஓ.பி.சி, பெண்கள் பயன்பெறும் 2 புதிய திட்டங்களை அறிவித்த மோடி

77வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், ஜி-20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி விவகாரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும், அங்கே அதற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Independence Day, Modi Independence Day speech, 77th Independence Day, சுதந்திர தின உரை, ஓபிசி, பெண்கள் பயன்பெறும் 2 புதிய திட்டங்களை அறிவித்த மோடி, Independence Day celebrations, Tamil indian express

பிரதமர் மோடி

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், ஜி-20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி விவகாரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும், அங்கே அதற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

Advertisment

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூகத்தில் பின்தங்கிய சமூகத்தை சென்றடையும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரண்டு புதிய முன்னெடுப்புகளை அறிவித்தார் - விஸ்வகர்மா யோஜனா, ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி செலவில் புதிய திட்டம் லக்பதி தீதி திட்டத்தின் (லட்சாதிபதி சகோதரி திட்டம்) கீழ், இரண்டு கோடி பெண்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும், இதனால் அவர்கள் ஆண்டுக்கு குறைந்தது ரூ.1 லட்சம் சம்பாதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், ஜி-20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி விவகாரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும், அங்கே அதற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

“இன்று, இரண்டு கோடி லக்பதி தீதிகளை உருவாக்கும் நோக்கத்துடன் மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள், நமது பெண் சக்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றின் திறனை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஜி-20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் பிரச்சினைகளை நான் முன்னெடுத்துச் சென்றபோது, முழு ஜி-20 குழுவும் அதன் முக்கியத்துவத்தை ஏற்று, அதற்கு நிறைய ஆதரவு வழங்குகிறோம்” என்று மோடி கூறினார். மேலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக் கூறினார்.

மேலும், “இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். ஒரு கிராமத்திற்குச் சென்றால், வங்கிகளில் பணிபுரியும் பெண்களைக் காண்பீர்கள், அங்கன்வாடியில் பணிபுரியும் பெண்களைக் காண்பீர்கள், மருந்து கொடுக்கும் பெண்களைக் காண்பீர்கள். இப்போது எனது கனவு 2 கோடி லக்பதி திதிகளை (ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்கள்) உருவாக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இரண்டு கோடி லக்பதி திதிகளை உருவாக்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வடிவில் புதிய மாற்றீடு பயன்படுத்தப்படும் என்றும், விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை கொண்டு வர பெண்களுக்கு ட்ரோன் பைலட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

“ஆளில்லா ட்ரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பயிற்சி அளிப்போம், மேலும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இந்திய அரசு ட்ரோன்களை வழங்கும், அவர்கள் பயிற்சி அளிப்பார்கள், நம்முடைய விவசாயப் பணிகளுக்கு ஆளில்லா ட்ரோன் சேவைகளை வழங்கத் தொடங்குவோம், ஆரம்பத்தில் நாங்கள் 15 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ட்ரோன்கள் பயிற்சியைத் தொடங்குவோம். ” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தச் நேரத்தில், பாரம்பரியத் திறன்களைக் கொண்டவர்களுக்காக ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையிலான விஸ்வகர்மா யோஜனா என்ற புதிய திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார்.

“வரும் நாட்களில், வரும் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ஒரு திட்டத்தை தொடங்குவோம். இந்த விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடன் வாழும், கருவிகள் மற்றும் கைகளால் வேலை செய்யும், பெரும்பாலும் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுமார் 13,000-15,000 கோடி ரூபாய் வழங்குவோம். நமது தச்சர்களாகட்டும், பொற்கொல்லர்களாகட்டும், கொத்தனார்களாகட்டும், சலவைத் தொழிலாளிகளாகட்டும், முடிதிருத்தும் சகோதர சகோதரிகளாகட்டும்…” என்று பிரதமர் மோடி கூறினார்.

மகளிர் சுயஉதவி குழுக்களின் உறுப்பினர்களுக்கு ட்ரோன் பைலட் பயிற்சி அளிக்கும் பிரதமரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த தீபக் பரத்வாஜ், இந்தியாவின் முன்னணி வேளாண் ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஐயோடெக் வேர்ல்ட் ஏவிகேஷன் இணை நிறுவனரும் இயக்குநருமான தீபக் பரத்வாஜ், “15,000 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்கும் பிரதமரின் அறிவிப்பு, அவர்களுக்கு ட்ரோன்களை இயக்கவும் பழுதுபார்க்கவும் பயிற்சி அளிப்பது, இந்தியாவின் விவசாய நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்தும், நமது தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் பெண்களுக்கு அதிக சக்தியை அளிக்கும். இது விவசாயத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்தும் மற்றும் கிராமப்புறங்களில் கணிசமான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விவசாய வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment