காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை எம்.பி; மக்களவையில் பலம் 100 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவின் சாங்லி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற விஷால் பாட்டீல், ராகுல் காந்தியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்; காங்கிரஸ் கட்சியின் பலம் 100 ஆக உயர்வு

மகாராஷ்டிராவின் சாங்லி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற விஷால் பாட்டீல், ராகுல் காந்தியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்; காங்கிரஸ் கட்சியின் பலம் 100 ஆக உயர்வு

author-image
WebDesk
New Update
vishal patel and rahul gandhi

சாங்லி தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் விஷால் பாட்டீல் வியாழக்கிழமை காங்கிரஸில் இணைந்தார். (புகைப்படம்: @patilvishalvp)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Manoj Dattatrye More

Advertisment

மகாராஷ்டிராவின் சாங்லி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கிளர்ச்சி வேட்பாளர் விஷால் பாட்டீல், வியாழன் அன்று இந்தியா கூட்டணி மற்றும் மஹா விகாஸ் அகாதிக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க:

"விஷால் பாட்டீலின் ஆதரவுடன், மக்களவையில் காங்கிரஸின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது," என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வஜீத் கதம் கூறினார். விஷால் பாட்டீலுக்கு சீட் கிடைக்க மிகவும் கடினமாகப் போராடியவர் விஸ்வஜீத் கதம்.

Advertisment
Advertisements

விஷால் பாட்டீல் மற்றும் அவரது ஆலோசகர் எம்.எல்.ஏ விஸ்வஜீத் கதம் ஆகியோர் வியாழக்கிழமை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்தனர்.

விஷால் பாட்டீல் தனது ஆதரவு கடிதத்தை மல்லிகார்ஜூன் கார்கேவிடம் கொடுத்தார்.
“எனது குடும்பம் பல ஆண்டுகளாக காங்கிரஸில் அங்கம் வகிக்கிறது. எனது தந்தை, தாத்தா, சகோதரர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்,'' என்று விஷால் பாட்டீல் கூறினார்.

விஷால் பாட்டீல் தனது குடும்பமும் தாக்கரே குடும்பமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறினார். “எங்கள் கட்சித் தலைவர்கள் உத்தவ் தாக்கரேவிடம் சாங்கிலி தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்தனர். இருப்பினும், எப்படியோ விஷயங்கள் செயல்படவில்லை. எனது குடும்பத்திற்கும் தாக்கரே குடும்பத்திற்கும் நல்ல உறவு உள்ளது. இப்போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், எங்களுக்கிடையிலான அனைத்து தவறான புரிதல்களும் முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன்,” என்று விஷால் பாட்டீல் கூறினார்.

முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரனான விஷால் பாட்டீல், சாங்லி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் அவருக்கு சீட்டு கிடைக்காததால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். விஷால் பாட்டீல் பா.ஜ.க எம்பி சஞ்சய்காகா பாட்டீலை தோற்கடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Maharashtra Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: