உக்ரைன் மீதான தாக்குதல்.. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்.. 11 நாடுகள் ஆதரவு.. புறக்கணித்த இந்தியா!
ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, "இந்தத் தருணத்தில் எவ்வளவு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வு உரையாடல்" என்றார்.
India abstained on a unsc resolution that Russia aggression against Ukraine
ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, "இந்தத் தருணத்தில் எவ்வளவு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வு உரையாடல்" என்றார்.
Advertisment
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் "ஆக்கிரமிப்பை" கண்டிக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை இந்தியா சனிக்கிழமை புறக்கணித்தது, கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும் பேச்சுவார்த்தைதான் ஒரே பதில் என்று இந்தியா கூறியது.
பிப்ரவரி மாதத்திற்கான’ ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ரஷ்யா - தீர்மானத்தை வீட்டோ செய்தது, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வாக்களிக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட மீதமுள்ள 11 உறுப்பினர்கள்’ தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், ரஷ்யா அதை வீட்டோ செய்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தனது வாக்கை விளக்கி, "உக்ரைனில் சமீபத்திய நிலைகளால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பிரதமர் நரேந்திர மோடி’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடமும் வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதனை தெரிவித்தார்.
"மனித உயிர்களை விலையாகக் கொண்டு எந்த தீர்வையும் எட்ட முடியாது" என்று திருமூர்த்தி கூறினார்.
உக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்கள் உட்பட இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து, நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.
"தற்கால உலகளாவிய ஒழுங்கு’ ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது,"
In UN Security Council meeting on #Ukraine today, India abstained on the vote on draft resolution.
அனைத்து உறுப்பு நாடுகளும் ஆக்கபூர்வமான முன்னோக்கிய வழியைக் கண்டுபிடிப்பதில் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும்" என்று திருமூர்த்தி கூறினார்.
" இந்தத் தருணத்தில் எவ்வளவு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், உரையாடல் மட்டுமே வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பதில். “இராஜதந்திரப் பாதை கைவிடப்பட்டது வருத்தமளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், இந்த தீர்மானத்தில் இருந்து விலகி இருக்க இந்தியா தேர்வு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் இந்தியா தனது "நிலையான, உறுதியான மற்றும் சமநிலையான நிலைப்பாட்டை" பேணி வருவதாக ஆதாரங்கள் தெரிவித்தன.
&feature=emb_logo
இந்தியா அனைத்து தரப்பினருடனும் தொடர்பில் உள்ளது, சம்பந்தப்பட்ட தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு வலியுறுத்துகிறது. வாக்களிப்பதன் மூலம்’ உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் இடைவெளியைக் குறைக்கவும், நடுநிலையைக் கண்டறியும் முயற்சியில்’ சம்பந்தப்பட்ட தரப்புகளை அணுகுவதற்கான விருப்பத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.
தீர்மானத்தின் முந்தைய வரைவு, ஐ.நா சாசனத்தின் 7வது அத்தியாயத்தின் கீழ் தீர்மானத்தை நகர்த்த முன்மொழிந்தது, பாதுகாப்பு கவுன்சில் அமலாக்க நடவடிக்கை எடுக்கக்கூடிய கட்டமைப்பை இது வழங்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இறுதி பதிப்பில் இது கைவிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “