/indian-express-tamil/media/media_files/dMla7iCtSoHbIIYVeqmg.jpg)
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் டிஎம்சி தலைவர் டெரெக் ஓ பிரையன்.
இந்தியா அரசியல் கூட்டணியின் தலைவர்களின் அடுத்த கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) தெரிவித்தார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “2024 தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாரதிய ஜனதாவை (பாஜக) எதிர்கொள்ளும் திட்டத்தை தலைவர்கள் விவாதித்து இறுதி செய்யக்கூடிய கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் சலசலப்பை காங்கிரஸ் தற்போது எதிர்கொண்டு வருகிறது.
முன்னதாக டிச.6ஆம் தேதி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பெரும்பாலான தலைவர்கள் பல்வேறு காரணங்களை கூறி கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததால், தர்மசங்கடத்திற்கு உள்ளான காங்கிரஸார் கூட்டத்தை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டமாக சுருக்கினர்.
இந்திய கூட்டணியின் பெரும்பாலான முன்னணி கட்சிகள், குறிப்பாக டிஎம்சி, ஆம் ஆத்மி மற்றும் ஜேடி(யு) ஆகியவை, சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, சீட் பகிர்வுப் பேச்சுக்கள் உட்பட, இந்தியக் கூட்டணியின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தியதற்காக காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளன.
அவர்களில் பெரும்பாலோர், இந்தியக் கூட்டமைப்பு அதன் உருவாக்கத்திற்குப் பிறகு பெற்ற அரசியல் வேகத்தை இழந்துவிட்டதாக நம்புகிறார்கள்.
அடுத்த ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை கூட்டாக எதிர்கொள்ள 26 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி ஏற்கனவே பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் மூன்று சுற்று ஆலோசனைகளை நடத்தியது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.