‘ஒருவர் நாட்டைப் பற்றி சிந்திக்காவிட்டால், பலர் உயிர் இழப்பார்கள்’ - ஜார்க்கண்ட் முதல்வர்

‘If one does not think about the country, many will lose their lives’ says Jharkhand CM Hemant Soren Tamil News: "நாடு கடலில் சிக்கிய கப்பல் போல் உள்ளது. இந்த நேரத்தில் ஒருவர் நாட்டைப் பற்றி சிந்திக்காவிட்டால், பலர் உயிர் இழப்பார்கள்" என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.

‘If one does not think about the country, many will lose their lives’ says Jharkhand CM Hemant Soren Tamil News: "நாடு கடலில் சிக்கிய கப்பல் போல் உள்ளது. இந்த நேரத்தில் ஒருவர் நாட்டைப் பற்றி சிந்திக்காவிட்டால், பலர் உயிர் இழப்பார்கள்" என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.

author-image
WebDesk
New Update
India news in tamil: ‘If one does not think about the country, many will lose their lives’ says  Jharkhand CM Hemant Soren

India news in tamil: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலைக்கு எதிராக போராடிவரும் நிலையில், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நம்மிடம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Advertisment

ஒரு மாநில முதல்வராக மத்திய அரசிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறீர்கள்?

எங்களுக்கு 4 கோடி தடுப்பூசிகள் தேவை, ஆனால் 40 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளன. எல்லா ஆக்ஸிஜன் ஆலைகளுக்கும், விஷயங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரிகளை மத்திய அரசு நியமித்தது. ஆனால் நீங்களே சொல்லுங்கள்: வைரஸ் ஒரு தேசிய பிரச்சினையா அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு பிரச்சினையா? ஏன் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை? மத்திய அரசு இந்த சிக்கலை எவ்வாறு கருதுகிறது?

இந்த பெருந்த்தொற்று குறித்த சிக்கலை மாநில அரசுகளே கையாள வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறதா?

Advertisment
Advertisements

அவர்கள் நாங்களே கையாள வேண்டும் என விட்டு விடவும் இல்லை, எங்களுக்கு ஆதரவளிக்கவும் இல்லை. நாங்கள் மருந்துகளை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் அதை ஒதுக்க மாட்டார்கள். அவர்களுக்கு எப்போது தோன்றுகின்றதோ அப்போது தான் அதை ஒதுக்குகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு செவிசாய்ப்பதில்லை என்று நீங்கள் உங்கள் சமீபத்திய ட்வீட்டில் பதிவிட்டிருந்தீர்கள். அவ்வாறு செய்ய உங்களைத் தூண்டியது எது?

மே 7 அன்று பிரதமர் மோடியுடன் நடந்த விர்ச்சுவல் (மெய்நிகர்) சந்திப்பின் சில நிமிடங்களில், தொலைக்காட்சி செய்தி சேனல்கள் அவ்வாறு காட்டத் தொடங்கின. ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு ஒருபோதும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இது மிகவும் அரசியல் ரீதியாக இருந்தது. மேலும் திட்டமிட்டு செய்வது போல இருந்தது. ஆனால் சண்டை நான் அங்கு செல்லவில்லை.

நாடு கடலில் சிக்கிய கப்பல் போல் உள்ளது. இந்த நேரத்தில் ஒருவர் நாட்டைப் பற்றி சிந்திக்காவிட்டால், பலர் உயிர் இழப்பார்கள். மேலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பாஜக என இரு கட்சி தொண்டர்களுமே இந்த தொற்று பாலியவார்கள்.

நாம் கருத்தியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் கப்பல் கடலில் சிக்கித் தவிக்கிறது. முதலில் அதைக் கரைக்கு கொண்டு வர வேண்டும். பிறகு அந்த பாஜகவினரோடு போராடலாம் என நினைக்கிறேன்.

மத்திய அரசு எதை அரசியல் ஆக்குகிறது என்று நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட சிக்கல்களைக் குறிப்பிட முடியுமா?

பலர் பிரதம மந்திரியின் பொது நிவாணரான நிதிக்கு நன்கொடை அளித்தனர். ஆனால் அந்த நிதியை செலவு செய்தததில் ஏதேனும் வெளிப்படைத்தன்மை உள்ளதா?

ஆனால் தடுப்பூசிகள் குறித்த விடயத்தில் மட்டும் வெளிப்படை தன்மை காட்டுவார்கள். இதனால் எங்களைப் போன்ற ஒரு மாநிலம் திவாலாகிவிடும். மேலும் தடுப்பூசிகள் குறித்த விடயத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுடன் எங்களால் ஒப்பிட முடியாது

ஆக்ஸிஜனை பொறுத்தவரை, அவை எங்கள் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு அடுத்த மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் எங்கள் மாநிலத்தில் தயார் செய்த ஆக்ஸிஜனை நாங்கள் பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. எங்களை பொறுத்தவரை எங்களுடைய ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

கோவின் தடுப்பூசி சான்றிதழ் பிரதமரின் படத்தைக் கொண்டுள்ளது. ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உங்கள் படத்துடன் உள்ள சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது…

மோடி ஜி தனது படத்தை ஏன் சான்றிதழில் வைத்தார்?

பெருந்தொற்று முடிந்ததும், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி, 2வது அலையின் எழுச்சி குறித்த தவறான நிர்வாகம் பற்றி பிரதமரிடம் கேள்விகளை தொடுக்குமா?

ஏன் எதிர்க்கட்சிகள் மட்டும்? அதிகார பதவிகளில் அமர்ந்திருக்கும் உள்ளவர்களும் அரசாங்கத்தை கேள்வி கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் மக்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள்…

ஒரு மாநிலத்தின் முதல்வராக தற்போது உள்ள கள நிலவரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த பெருந்தொற்று காலத்தில் நான் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். ஒருவர் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் மக்கள் குறைந்தபட்சம் தடுப்பூசிகள், மருந்துகள் அல்லது பரிசோதனைகள் தொடர்பாக தயங்குவதைத் தணிக்கவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Chief Minister Hemant Soren Jharkhand India Pm Modi Narendra Modi Central Government Covid 19 In India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: