Advertisment

தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமையுள்ளது - பாகிஸ்தான்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவரசர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News today live updates

News today live updates

கடந்த வாரம் ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத படையினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisment

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவரசர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா முகமது குரேஷி, “எல்லைப் பகுதிகளை பகைமை உணர்வுடன் இந்தியா ஆக்கிரமித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டை மீறி இந்தியா நடத்திய இத்தாக்குதலுக்கு, தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி கொடுப்பதற்கு, பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

India Vs Pakistan Indian Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment