இந்தியாவை குறிவைத்து 300- 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது: மத்திய அரசு விளக்கம்

"இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிலையங்களை குறிவைக்கும் முயற்சிகளை மறுப்பது பாகிஸ்தானின் போலித்தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்திய ராணுவம் முறையாகவும், போதுமானதாகவும் பதிலளித்தனர்" என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

"இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிலையங்களை குறிவைக்கும் முயற்சிகளை மறுப்பது பாகிஸ்தானின் போலித்தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்திய ராணுவம் முறையாகவும், போதுமானதாகவும் பதிலளித்தனர்" என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

author-image
WebDesk
New Update
India Pakistan Tensions MEA Press Conference operation sindoor Tamil News

"இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிலையங்களை குறிவைக்கும் முயற்சிகளை மறுப்பது பாகிஸ்தானின் போலித்தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்திய ராணுவம் முறையாகவும், போதுமானதாகவும் பதிலளித்தனர்" என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 7 - 8 ஆம் தேதி இரவில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடைமுறைக்கு வந்தது. 

Advertisment

இந்தியாவின் இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 8 மற்றும் இன்று 9 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் ஆளில்லா விமானம் என அழைக்கப்படும் ட்ரான் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.  

பாகிஸ்தான் ஏவிய பல ட்ரான்கள் முறியடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன. அதன் தொடர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, பாகிஸ்தான் பயணிகள் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்துவதை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை 36 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவ முயன்றதாக தெரிவித்தார். 

"நமது ஆயுதப் படைகள் இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகளைப் பயன்படுத்தி பல பாகிஸ்தானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தின. பதிண்டா ராணுவ நிலையத்தை குறிவைத்து அனுப்பப்பட்ட ஒரு பாகிஸ்தானிய ஆயுதமேந்திய ஆளில்லா வான்வழி விமானத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது." என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "லே முதல் சர் க்ரீக் வரையிலான இந்தியாவின் பல பகுதிகளை குறிவைத்து 300-400 ட்ரோன்கள் கொண்ட கூட்டத்தை பாகிஸ்தான் ஏவியது. நேற்று வியாழக்கிழமை அதிகாலை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 15 இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது.

இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிலையங்களை குறிவைக்கும் முயற்சிகளை மறுப்பது பாகிஸ்தானின் போலித்தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இந்திய ராணுவம் முறையாகவும், போதுமானதாகவும் பதிலளித்தனர். மேலும் அண்டை நாட்டில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்களில் இருந்து இந்தியா ஆயுதமேந்திய ட்ரோன்களை ஏவியது. ஒரு ட்ரோன் ஏ.டி ரேடார் அமைப்பை அழித்தது.

பாகிஸ்தானில் இருந்து வரும் பல கூற்றுகளை முற்றிலும் மறுக்கிறேன். குறிப்பாக பூஞ்சில் உள்ள குருத்வாரா பாகிஸ்தானால் தாக்கப்பட்டது, மேலும் இந்த சம்பவத்தில் சீக்கிய சமூகத்தின் சில உள்ளூர் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். ட்ரோன் தாக்குதல் மூலம் நான்கானா சாஹிப் குருத்வாராவை குறிவைத்து இந்தியா தாக்கியதாக பாகிஸ்தானிலிருந்து தவறான தகவல் வருகிறது. இது மீண்டும் பொய் மற்றும் பாகிஸ்தானின் தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

மே 07-08, 2025 அன்று இரவு, பாகிஸ்தான் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தராலி மற்றும் பூஜ் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது. இவை ஒருங்கிணைந்த எதிர் யு.ஏ.எஸ் கட்டம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் நடுநிலையாக்கப்பட்டன.

மே 7 ஆம் தேதி நடத்தப்பட்ட எதிர் தாக்குதல், காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே. இந்தியாவின் அணுகுமுறை "இலக்கு வைக்கப்பட்டது, துல்லியமானது மற்றும் அளவிடப்பட்டது. எங்கள் அணுகுமுறை நிலைமையை மோசமாக்குவது அல்ல, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மட்டுமே நாங்கள் பதிலளித்தோம். இப்போது பாகிஸ்தான் தான் நிலைமையை மோசம் ஆக்குகிறது. அதற்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம். இதனை தேர்வு செய்தது பாகிஸ்தான்." என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.

Pakistan India Central Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: