3.8 பில்லியன் டாலர் உதவி; இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கும் – வெளியுறவுத் துறை

இலங்கைக்கு இதுவரை 3.8 பில்லியன் டாலர் உதவி; சமீபத்திய நெருக்கடி நிலையில், இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் – வெளியுறவுத்துறை

இலங்கைக்கு இதுவரை 3.8 பில்லியன் டாலர் உதவி; சமீபத்திய நெருக்கடி நிலையில், இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் – வெளியுறவுத்துறை

author-image
WebDesk
New Update
3.8 பில்லியன் டாலர் உதவி; இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கும் – வெளியுறவுத் துறை

Shubhajit Roy

India stands with people of Sri Lanka, has extended support of over $3.8 billion this year: MEA: இலங்கையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழலுக்கு முதல் எதிர்வினையாக, அதாவது இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் இல்லத்தை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்ட பின்னர், "ஜனநாயக வழிமுறைகள் மற்றும் மதிப்புகள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் எண்ணங்களை நனவாக்க இலங்கை மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று இந்தியா ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.

Advertisment

ஜனநாயக செயல்முறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு போன்ற இந்த அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள விஷயங்கள், சனிக்கிழமை கொழும்பு தெருக்களில் வெடித்த மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக இருந்தது. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக இருந்ததாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: இலங்கையில் மக்கள் கிளர்ச்சி; இந்தியா ‘மூவ்’ என்ன?

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு இந்தியா, நமது இரு நாடுகளும் ஆழமான நாகரீக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன” என்றார்.

"இலங்கை மற்றும் அதன் மக்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை நாங்கள் அறிவோம், மேலும் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சித்த இலங்கை மக்களுடன் நாம் நிற்கிறோம்," என்று அரிந்தம் பாக்சி கூறினார்.

Advertisment
Advertisements

"நமது முதல் அண்டை நாடு கொள்கையில் இலங்கைக்கான முக்கிய இடத்தைப் பின்பற்றும் வகையில், இலங்கையின் தீவிர பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்காக இந்தியா இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது" என்று அரிந்தம் பாக்சி கூறினார்.

“இலங்கையில் சமீபத்திய கிளர்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் எண்ணங்களை நனவாக்க முற்படுகையில், இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது,” என்று அரிந்தம் பாக்சி கூறினார்.

இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை விவசாய அமைச்சரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்ததாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

“பல்வேறு பிரிவுகள், பலதரப்பட்ட கோரிக்கைகள்: ஒரு பங்குதாரர் -#இந்தியா!!!! இந்திய தூதர் மாண்புமிகு விவசாய அமைச்சரைச் சந்தித்து, இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட கடன் வரிசையின் கீழ் வழங்கப்பட்ட 44,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான யூரியாவின் வருகை குறித்து அவருக்குத் தெரிவித்தார். இந்தியாவின் இந்த சமீபத்திய உதவி, இலங்கையின் விவசாயிகள் உட்பட இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் குடிமக்களின் உணவுப் பாதுகாப்பிற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று இந்திய தூதர் வலியுறுத்தினார்.

கொழும்பின் தெருக்களில் மக்கள் கோபம் வெடித்த நிலையில், தற்போதைய இலங்கை அரசியல் மற்றும் இராணுவத் தலைமை தற்போதைய நெருக்கடியை எவ்வாறு கையாள்கிறது என்பதை கண்காணிக்க முடிவெடுத்து இந்தியா எச்சரிக்கையுடன் நடந்துகொண்டது.

கொழும்பில் உள்ள இந்திய இராஜதந்திரிகள் கள நிலைமையை "நெருங்கிய கண்காணிப்பில்" வைத்திருந்தனர். இந்திய தூதரகம் அதிபரின் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ராஜினாமா செய்ய முன்வந்துள்ள நிலையில், கொழும்பில் அரசாங்கம் சலசலப்பு மற்றும் குழப்பமான நிலையில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கொழும்பின் தெருக்களில் அராஜகம் மற்றும் ஒரு சாத்தியமான நிலை இல்லாத அரசியல் தலைமை ஆகியவை நல்லவை அல்ல.

இந்தியா, இலங்கையின் அரசியல் தலைமையுடன் பேசி வரும் அதே வேளையில், அது "இலங்கை மக்களுக்காக" பாடுபடுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இது ராஜபக்ச குடும்பத்தையோ அல்லது குறிப்பிட்ட அரசியல் தலைவரையோ ஆதரிக்கிறது என்ற எந்த அச்சத்தையும் நிராகரிப்பதற்கான ஒரு எச்சரிக்கையான செய்தியாகும். ஞாயிற்றுக்கிழமை அறிக்கை "இலங்கை மக்கள்" மீதான கவனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: