Advertisment

‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் இல்லை’: சாவர்க்கரை குறிப்பிட்டு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மீது ராகுல் தாக்கு

“பா.ஜ.க உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றி பேசும்போது, அவர்கள் சாவர்க்கரை இழிவுபடுத்துகிறார்கள்,” என்று மக்களவையில் ராகுல் காந்தி கூறினார்.

author-image
WebDesk
New Update
rahul gandhi sarvakar

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார் (பி.டி.ஐ புகைப்படம்)

Asad Rehman

Advertisment

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்குவது போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகளை வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டம் குறித்த சிறப்பு விவாதத்தில் சனிக்கிழமை பங்கேற்று, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை கடுமையாக சாடினார். மேலும், இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கர், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் இல்லை" என்று கூறியதாக ராகுல் காந்தி கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: ‘Nothing Indian about Constitution’: In Lok Sabha, Rahul Gandhi attacks BJP, RSS by quoting V D Savarkar

“பா.ஜ.க உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றி பேசும்போது, அவர்கள் சாவர்க்கரை இழிவுபடுத்துகிறார்கள்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

Advertisment
Advertisement

சிறப்பு விவாதத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: “நமக்கு முன்னால் மிகவும் மாறுபட்ட தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் நிற்கிறார்கள். அவர்களின் உச்ச தலைவரை மேற்கோள் காட்டி எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன்... பா.ஜ.க.,வை அல்ல... ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களுக்கு நவீன விளக்கம். ‘அரசியலமைப்புச் சட்டத்தின் மோசமான விஷயம் என்னவென்றால், அதில் இந்தியர்கள் பற்றி எதுவும் இல்லை. நமது இந்து தேசத்தின் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வழிபடக்கூடிய வேதம் மனுஸ்மிருதியாகும்... இந்தப் புத்தகம் பல நூற்றாண்டுகளாக நம் தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தை குறியீடாக்கியுள்ளது. இன்று மனுஸ்மிருதி சட்டமாகிவிட்டது. இவை சாவர்க்கரின் வார்த்தைகள்.”

“அவர் (சாவர்க்கர்) தனது எழுத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். மனுஸ்மிருதியால் நமது அரசியல் சாசனம் முறியடிக்கப்படும் என்று எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்று நான் கேட்கிறேன், ஏனெனில் நீங்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசும்போது, நீங்கள் சாவர்க்கரை இழிவுபடுத்துகிறீர்கள், ”என்று ராகுல் காந்தி கூறினார்.

மகாபாரதத்தின் துரோணாச்சாரியாரைப் போலவே, பா.ஜ.க அரசு இந்திய இளைஞர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளின் கட்டைவிரலை வெட்டுகிறது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

தொழிலதிபர் கெளதம் அதானியைக் குறிப்பிட்டு: “தாராவியை அதானிக்குக் கொடுக்கும்போது, தாராவியின் சிறு வணிகர்களின் கட்டைவிரலை வெட்டுகிறீர்கள். அவருக்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் கொடுத்து அதையே செய்கிறீர்கள். நீங்கள் நேர்மையான வணிக நிறுவனங்களின் கட்டைவிரலை வெட்டுகிறீர்கள்,” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

லேட்டரல் என்ட்ரி மூலம், இளைஞர்கள், ஓ.பி.சி.,க்கள் மற்றும் எஸ்.சி.,களின் கட்டைவிரலை வெட்டுகிறீர்கள். சபாநாயகர் ஐயா, ஏகலைவன் எப்படி பயிற்சி செய்தாரோ, அதே வழியில் இளைஞர்கள் தேர்வுகளுக்கு பயிற்சி செய்கிறார்கள். முன்பெல்லாம் இளைஞர்கள் எழுந்து பயிற்சி எடுத்து ஓடுவார்கள். நீங்கள் அக்னிவீரனை ஆரம்பித்தபோது, அவர்களின் கட்டைவிரலை வெட்டியிருக்கிறீர்கள். நீங்கள் வினாத்தாள்களை கசியவிடும்போது, இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டுகிறீர்கள்” என்று ராகுல் காந்தி கூறினார்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கான காங்கிரஸின் வாக்குறுதியைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி கூறினார்: “இந்தியா கூட்டணியின் சித்தாந்தம் நாங்கள் அரசியலமைப்பைக் கொண்டு வந்தோம், அதைப் பாதுகாப்போம். (டாக்டர் பி.ஆர்) அம்பேத்கர் ஜி, அரசியல் சமத்துவம் இருந்து, சமூக சமத்துவம் இல்லை என்றால், அரசியல் சமத்துவம் அழிந்துவிடும் என்றார். அரசியல் மற்றும் சமூக சமத்துவம் முடிந்துவிட்டது. நிதி மற்றும் பொருளாதார சமத்துவமும் முடிந்துவிட்டது. எனவே, அடுத்த கட்டமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். கட்டைவிரல்கள் வெட்டப்பட்ட நபர்களுக்கு அதை காட்ட விரும்புகிறோம்.”

"இடஒதுக்கீடு மீதான 50 சதவீத வரம்பு நீக்கப்படும்" என்றும் ராகுல் காந்தி கூறினார். “ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நான் உறுதியளித்திருந்தேன், அது நிறைவேற்றப்படும், மேலும் ஒரு புதிய வகையான வளர்ச்சி செய்யப்படும். 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற சுவரை உடைப்போம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை நீங்கள் செய்யலாம்,'' என்று ராகுல் காந்தி கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த இரண்டு நாள் விவாதத்தைத் தொடங்கி வைத்து, “எந்த சாதியினருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறீர்கள் என்பதற்கான வரைபடத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டும்” என்று கூறியதற்கு ஒரு நாள் கழித்து, இடஒதுக்கீடு குறித்த ராகுல் காந்தியின் கருத்து வந்தது.

ராகுல் காந்தி சமீபத்தில் ஹத்ராஸுக்குச் சென்றதைக் குறிப்பிட்டார், அங்கு கும்பல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தலித் ஒருவரின் குடும்பத்தை ராகுல் காந்தி சந்தித்தார், மேலும் "அவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை, அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை தினமும் அச்சுறுத்துகிறார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Bjp Congress Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment