/tamil-ie/media/media_files/uploads/2023/02/PTI02_06_2023_000069A.jpg)
New Delhi: Opposition parties' MPs stage a protest over Adani row at the Mahatma Gandhi statue in the Parliament complex, in New Delhi, Monday, Feb. 6, 2023. (PTI Photo/Kamal Singh) (PTI02_06_2023_000069A)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடந்த 3 தினங்களாக பாராளுமன்றத்தை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதானி குழும கு்ற்றச்சாட்டுகள் தொடர்பான எதிர்கட்சிகள் ஒற்றுமையைக் காட்டினாலும் (கூட்டங்கள் மற்றும் கூட்டு ஊடக சந்திப்பு போன்றவை), கட்சிகளிடையே கணிசமான அவநம்பிக்கை உள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், எதிர்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள இந்த அறிகுறிகள் நல்லதல்ல என சில அரசியல் விமர்சனகர்கள் கூறி வருகின்றனர்.
1970, 80கள் மற்றும் 90களில் பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸுக்கு எதிரானதுதான் கட்டுப்படுத்தும் சக்தியாக இருந்தது என்றாலும் தற்போது, ஆளும் பா.ஜ.க மீதான கடும் விமர்சனம், காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளை இப்போது ஒன்று திரள வைத்துள்ளது. ஆனால் நம்பிக்கை குறைபாடு அவர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்தவில்லை மற்றும் ஒவ்வொரு தரப்பினரையும் சந்தேகத்தின் கூறுகளுடன் பார்க்க தூண்டுகிறது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அமளிக்கு எதிரான எதிர்க்கட்சியின் மூலோபாயம் இந்த சந்தேகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். கடந்த வாரம் புதன் கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வியாழன் அன்று, எதிர்க்கட்சிகள் கூடி அதானி விவகாரத்தை இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் எழுப்ப ஒருமனதாக முடிவு செய்தன. அரசுக்கு எதிரான வெளிப்பாடுகள் தீவிரமானவை மற்றும் அரசாங்கத்தை அஞ்ச வைக்கும் அளவுக்கு மோசமானவை என்று மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியிருந்தனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒருமித்து அழைப்பு விடுக்க ஒப்புக்கொண்டனர், ஆனால் விசாரணையின் தன்மையில் உடன்படவில்லை. ஜேபிசி விசாரணையை கோர வேண்டும் என்று காங்கிரஸ் கருதியது. திரிணாமுல் காங்கிரஸும் இடதுசாரிகளும் இதற்கு உடன்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.
எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வேறுவிதமாகக் கூறி நடவடிக்கைகளை சீர்குலைத்து, முடக்கினால் திங்கள்கிழமை காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தி, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதானி பிரச்சினை மற்றும் கவலைக்குரிய பிற விஷயங்களை எழுப்ப ஒரு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் எதிர்கட்சிகளிடையே அவநம்பிக்கை மிகவும் அதிகமாக இருந்து வரும் நிலையில், தனிப்பட்ட முறையில் பல தலைவர்கள் ஆளும் தரப்பு சில விவாதத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சியில் உள்ள சிலரை பயன்படுத்தலாம். உண்மையில், மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாகச் “பாஜக பயந்து விட்டது. நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடைபெறும் பிப்ரவரி 6 திங்கள் முதல் மோடி அரசை உடைக்க சிறந்த வாய்ப்பு.
திரிணாமுல் காங்கிரஸாகிய நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம், இடையூறு செய்யக்கூடாது. இதனால் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வரவும், பிற்பகலில் விவாதத்தில் பங்கேற்கவும் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புவதாகக் கூறுகின்றனர். இது குறித்து காங்கிரஸ் சார்பில் ப சிதம்பரம் பேசுவார் என கூறப்படுகிறது. ஆனாலும் இடையூறுகள் தொடர்ந்தன, காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சி மற்றும் கே சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மீது குற்றம் சாட்டினர். நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்பதில் ஆர்ஜேடி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு விருப்பம் இல்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். மேலும் "எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/image-162.png)
ஆனால், காங்கிரஸே பிரிந்தது என்று மற்ற கட்சிகள் கூறின. "காங்கிரஸில் ஒரு பிரிவினர் எதிர்க்கட்சிகள் விவாதத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றொரு பிரிவினர் இடையூறுகளை ஆதரிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். என்று காங்கிரஸ் அல்லாத தலைவர் ஒருவர் கூறினார். காங்கிரஸ் வேண்டுமென்றே உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை, ஏனெனில் நாடு முழுவதும் நடத்தும் தெருப் போராட்டங்கள் பாராளுமன்றத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்று மற்றொரு தலைவர் கூறினார்.
"அவர்கள் ஆம் ஆத்மி மற்றும் பிஆர்எஸ்ஸை சமாதானப்படுத்த கடுமையாக முயற்சிக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் இன்று ஒருவித போராட்டத்தை நடத்துகிறார்கள்... "நாம் இடையூறுகளை தந்திரோபாயமாக பயன்படுத்த வேண்டும்," என்று ஒரு எம்.பி கூறினார். “ஜனாதிபதி உரை மீதான விவாதம் ஒரு நல்ல வாய்ப்பு. இது 12 மணி நேர விவாதம். பா.ஜ.க.வும் அதற்கு நட்பு கட்சிகளும் அதிகபட்சம் மூன்று மணி நேரம் பேசுவார்கள். எங்களின் புள்ளிகளைக் காட்ட ஒன்பது மணிநேரம் உள்ளது. இது ஒரு மசோதா அல்ல. எல்லா விஷயங்களிலும் நாம் பேசலாம்."
வியூகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் ஒரே பக்கத்தில் இருக்கின்றனர் என்று ஓ'பிரையன் கூறியுளளார். மேலும் “தந்திரோபாயங்களைப் பொறுத்தவரை, சில விருப்பங்கள் இருக்கலாம். ஆனால், வியூகம் அமைந்தவுடன், தந்திரோபாயங்களை உருவாக்க முடியும்,'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமாகச் சொல்வதென்றால், பிரச்சினைகள், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களில் தனிப்பட்ட கட்சிகள் சொந்தக் கருத்துக்கள் மற்றும் பார்வைகளைக் கொண்டிருப்பதில் தவறில்லை. நாளைக்குள் (இன்று) விவாதத்தை அனுமதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்யலாம், மேலும் பாஜக மற்றும் அரசாங்கத்தை ஒரே குரலில் வீழ்த்தலாம். ஆனால், ஒற்றுமை என்ற போர்வைக்கு அடியில் நம்பிக்கையின்மையும், தனித்துவத்தின் மீது ஒரு கூறும் உள்ளது என்பதே உண்மை.
யூபிஏ 2 (UPA II) அரசாங்கத்தின் போது இருந்ததைப் போலல்லாமல், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான BJP தானே நாடாளுமன்றத்தை முடக்கும் போது, எதிர்க்கட்சிகள் எண்ணிக்கையில் மிகவும் பலவீனமாக இருந்தது. ஆனால் இப்போது எனவே, ஒருவருக்கொருவர் தேவை என்ற நிலை உள்ளது. “இது பழைய அஜீத் ஜோக் போல... ஒரு மனிதனை திரவ ஆக்ஸிஜனில் மூழ்கடித்து விடு, அந்த திரவம் அவனை வாழ விடாது, ஆக்சிஜன் அவனை சாக விடாது... என்பது போலத்தான். பாஜக எதிர்ப்பு நம்மை ஒன்றாக இருக்க தூண்டுகிறது... ஆனால் லட்சியங்கள் கட்சிகள்) மற்றும் அரசியல் நம்மில் ஒற்றுமையை ஏற்படுத்த தவறிவிடுகிறது,” என்று ஒரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.