இந்திய தயாரிப்பான ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது கூடுதல் சிறப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திய தயாரிப்பான ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

இந்திய ராணுவ ஆய்வு சார்பில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

Advertisment

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் டி.ஆர்.டி.ஓ சார்பில், ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களுக்கு ருஸ்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பில் வெளியான ருஸ்டம்-2 விமானத்தின் சோதனை ஓட்டம் கர்நாடகவில் உள்ள சலக்கேரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

நேற்று(25.2.18) நடைபெற்ற இந்த சோதனை ஒட்டத்தை, மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், டி.ஆர்.ஓ.டி. தலைவருமான கிறிஸ்டோபர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். ஏற்கனவே, ருஸ்டம்-1 என்ற விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், ருஸ்டம்-2 என்ற ஆளில்லா விமானத்தின் சோதனையும் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது.

அமெரிக்காவின் பிரிடேட்டர் ஆளில்லா விமானத்துக்கு சமமான தரத்தில் இந்த ருஸ்டம்-2 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிரிகளின் இடங்களை கண்காணிப்பதுடன், ஆயுதங்களையும் சுமந்து செல்லும் நோகில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ருஸ்டம்-2 விமானத்தின் சிறப்பு திறனே, தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது கூடுதல் சிறப்பு.

Advertisment
Advertisements

நடுத்தர உயரத்தில், நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்த இந்த ருஸ்டம்-2 விமானம். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: