New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/PC-1.jpg)
INX media case : சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்துள்ள போதிலும், தற்போது அமலாக்கத்துறையினரும் அவரை கைது செய்துள்ளதால், அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், உச்சநீதிமன்றம், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெடித்தது. இந்த புகாரில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் விசாரணையில் கடந்த 21ஆம் தேதி, ப.சிதம்பரத்தை அவரது வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு சமீபத்தில் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ரூ.1 லட்சம் மதிப்பில் இரண்டு சூரிட்டிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
இதனிடையே, இதே வழக்கில் மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். போலீஸ் காவல் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனையடுத்து சிபிஐ தொடுத்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்துள்ள போதிலும், தற்போது அமலாக்கத்துறையினரும் அவரை கைது செய்துள்ளதால், அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.