Advertisment

ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவு முன் சரணடைய அனுமதி கோரிய சிதம்பரம் மனு தள்ளுபடி

இதற்கு பதிலளித்த சிபல், "காங்கிரஸ் தலைவருக்கு சரணடைய உரிமை உண்டு என்றும், அமலாக்கத்துறை வாதம்  வரை தண்டிக்கும் நோக்கம் கொண்டது" என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
19 லட்சம் மக்களுக்கு பதில் என்ன ? சிதம்பரம் ட்வீட்

Tamil Nadu news today in tamil

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு முன்பாக சரணடைய தயாராக இருப்பதாக கூறி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்ற கபில் சிபல் கோரிக்கையை சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் நிராகரித்தார்.

கடந்த வியாழக்கிழமை, சிதம்பரத்தின் கைது அவசியம் என்றாலும், அது தகுந்த நேரத்தில் செய்யப்படும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அமலாக்கத்துறைக்காக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சிதம்பரத்தின் விண்ணப்பத்தை எதிர்த்தார். அவர் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம், “இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் 6 பேரை வரவழைத்துள்ளோம். அவர்களில் 3 பேர் விசாரிக்கப்பட்டார்கள். ஆறு நபர்களையும் நாங்கள் விசாரிக்க வேண்டும். அவர் (சிதம்பரம்) ஏற்கனவே நீதித்துறை காவலில் இருப்பதால் ஆதாரங்களை சேதப்படுத்தும் நிலையில் இல்லை" என்றது.

இதற்கு பதிலளித்த சிபல், "காங்கிரஸ் தலைவருக்கு சரணடைய உரிமை உண்டு என்றும், அமலாக்கத்துறை வாதம்  வரை தண்டிக்கும் நோக்கம் கொண்டது" என்றார்.

73 வயதான சிதம்பரம் தற்போது சிபிஐ விசாரிக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. ஏறக்குறைய 20 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார்.

அதேபோல், மலேசியாவில் இயங்கி வந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board) தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக மேக்சிஸ் நிறுவனம் கார்த்தியின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணத்தினை பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ அமைப்பு இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

P Chidambaram Inx Media
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment