இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியராக பணியாற்றிய, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார்.
கிருஷ்ணன் சுப்ரமணியன் புதிய ஆலோசகராக பதவி
இதற்கு முன்பு தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி வகுத்து வந்த அரவிந்த் சுப்ரமணியன் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி, தன்னுடைய சொந்த பிரச்சனைகள் காரணமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் முடிவடைய ஒரு வருடம் இருக்கின்ற நிலையிலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பொருளாதார வல்லுநர்கள் பூனம் குப்தா, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி புதிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிகாகோவில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் இவர். செபி கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். பந்தன் வங்கி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் மற்றும் ஆர்.பி.ஐ. அகாடமி ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க