சந்திரயான்-3 கருவிகளால் நடத்தப்பட்ட சோதனைகளின் முதல் வெளியீடு, நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை குறைந்தபட்சம் ஆழத்தில் தென் துருவத்திற்கு அருகில் வேகமாகக் குறைவதை வெளிப்படுத்தியுள்ளது.
சந்திரயான்-3 பயணத்தின் சமீபத்திய தகவலில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திங்கள்கிழமை நிலவின் மேற்பரப்பில் சுற்றித் திரிந்த பிரக்யான் ரோவர் அதன் இடத்திற்கு முன்னால் ஒரு பெரிய பள்ளத்தைக் கண்டதாகக் கூறியது. அதைத் தொடர்ந்து ரோவர் பாதுகாப்பாக திருப்பி விடப்பட்டது.
ரோவர் இப்போது ஒரு புதிய பாதையில் செல்கிறது என்று இஸ்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்திருப்பதாவது: “ஆகஸ்ட் 27, 2023-ல் ரோவர் அதன் இருப்பிடத்திலிருந்து 3 மீட்டர் முன்னால் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தைக் கண்டது. அதனால் ரோவர் அந்த பாதையில் பின்னால் வருவதற்கு கட்டளையிடப்பட்டது. ரோவர் இப்போது பாதுகாப்பாக ஒரு புதிய பாதையில் செல்கிறது.” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சந்திரயான்-3 கருவிகளால் நடத்தப்பட்ட சோதனைகளின் முதல் வெளியீடு, நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை குறைந்தபட்சம் ஆழத்தில் தென் துருவத்திற்கு அருகில் வேகமாகக் குறைவதை வெளிப்படுத்தியுள்ளது.
சந்திராவின் மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை, அல்லது லேண்டர் தொகுதியில் உள்ள ஒரு கருவியான ChaSTE, நிலவின் மேல் மண்ணில் வெப்பநிலையில் கூர்மையான வீழ்ச்சியை அளவிடுகிறது. மேற்பரப்பிலிருந்து சுமார் 10 செ.மீ கீழே, வெப்பநிலை கிட்டத்தட்ட -10 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. மேற்பரப்பில் அது சுமார் 45 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் நோக்கங்களில் நிலவின் மேல் மண்ணின் வெப்பநிலை விவரத்தை தயாரிப்பதும் ஒன்றாகும்.
இஸ்ரோ 40 வினாடிகள் கொண்ட வீடியோவை சனிக்கிழமை வெளியிட்டது. அதில் பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களைத் தேடி சந்திரனில் விண்கலம் இறங்கும் இடமான சிவசக்தி முனையில் சுற்றித் திரிவதைக் கண்டது. அதன், பின்னால் சக்கர தடங்களை லேண்டருடன் விட்டுவிட்டு பள்ளம் நிரம்பிய நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்வதைக் கண்டது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கியதாக இஸ்ரோ ஆகஸ்ட் 23-ம் தேதி வரலாற்றை பதிவு செய்தது. இதன் மூலம், நிலவின் அறியப்படாத தென் துருவப் பகுதியை அடைந்த முதல் நாடாகவும், முந்தைய சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு, இந்தியா நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“