New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/a766.jpg)
இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 8 ராக்கெட்டுடன் இன்று விண்ணில் பாய்ந்தது
இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 8 ராக்கெட்டுடன் இன்று விண்ணில் பாய்ந்தது.
அதி நவீன தொலைத் தொடர்பு சேவைக்காக எஸ். பேண்ட் ஆன்டனாவுடன் ஜிசாட்-6ஏ செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ உருவாக்கயது. இதன் 27 மணிநேர கவுண்டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
இந்த நிலையில், 2,140 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து புறப்பட்ட 17 நிமிஷம் 46 நொடிகளில் விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்படி, வெற்றிகரமாக விண்வெளிப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக விண்ணில் ஏவப்படும் ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்8 என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.