Advertisment

ஹிமாச்சலில் 2 சிமெண்ட் ஆலைகளை மூடிய அதானி குழுமம்; டிரக் சங்கங்களுடன் பிரச்சனையை தீர்க்க அரசுக்கு வலியுறுத்தல்

அதானி குழுமத்தின் இரண்டு சிமென்ட் ஆலைகள் மூடப்பட்டதால் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு இதுவே முதல் பெரிய சோதனையாகும்

author-image
WebDesk
New Update
ஹிமாச்சலில் 2 சிமெண்ட் ஆலைகளை மூடிய அதானி குழுமம்; டிரக் சங்கங்களுடன் பிரச்சனையை தீர்க்க அரசுக்கு வலியுறுத்தல்

டிரக் சங்கங்களுடனான பிரச்சனையால் ஹிமாச்சலில் 2 சிமெண்ட் ஆலைகளை மூடிய அதானி குழுமம்

Amil Bhatnagar

Advertisment

காங்கிரசின் சுக்விந்தர் சிங் சுகு முதல்வராகப் பொறுப்பேற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, டிரக் சங்கங்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக டிசம்பர் 15 ஆம் தேதி ஹிமாச்சலில் உள்ள இரண்டு சிமென்ட் ஆலைகளை மூடிய அதானி குழுமம், தொழிற்சங்கங்கள் ஆண்டுக்கு 50,000 கிமீ வாகனங்களை இயக்குவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், வாகனங்களை அனுப்புவதை 550 ஆகக் குறைக்க (தற்போதைய 3,311 இல் ஆறில் ஒரு பங்கு) வேண்டும் என்றும், ஆலையில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய அனைத்து செயல்பாட்டு முடிவுகளையும் நிறுவனத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளருக்கு நகல் வைக்கப்பட்டு, மாநிலத்தின் நிரந்தர நிலைக்குழுவின் தலைவருக்கு ஜனவரி 19 அன்று எழுதிய கடிதத்தில், அதானி சிமென்ட் தலைமை நிர்வாக அதிகாரி (ACC & அம்புஜா சிமெண்ட்ஸ் அஜய் கபூர்), “தொழிற்சங்கங்கள் திறம்பட கட்டுப்படுத்தி, நிறுவனங்களின் களத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து தொடர்பான செயல்பாட்டு முடிவுகளையும் எடுப்பதால் இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்... சரக்குக் கட்டணத்தை தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்துவதால், அதை செயற்கையாக மிக அதிக அளவில் வைத்துள்ளனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: தலித்துகள், பழங்குடியினரை இழிவுபடுத்தும் ராம்சரித்மனாஸ் காவியம்; பிரசாத் மௌரியா கருத்தும்; பாஜக எதிர்ப்பும்

சரக்கு கட்டணத்தை மதிப்பிடுவது குறித்து முடிவெடுப்பதற்காக நிரந்தர நிலைக்குழு 2005ல் மாநில அரசால் அமைக்கப்பட்டது.

இரு தரப்பினரும் ஒரு மாதத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், ஹிமாச்சல் பிரதேச தொழில்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சவுகானும் பங்கேற்ற வெள்ளிக்கிழமையன்று நடந்த சமீபத்திய கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இரண்டு சிமென்ட் ஆலைகள் மூடப்பட்டதால் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு இதுவே முதல் பெரிய சோதனையாகும்.

ஒரு டன்னுக்கு ஒரு கி.மீ.க்கு ஆகும் செலவு அல்லது அதானி குழுமத்தால் முன்மொழியப்பட்ட சரக்கு கட்டணம் சர்ச்சையின் மையத்தில் உள்ளது. போக்குவரத்து செலவுகள் வரி, காப்பீடு, தேய்மானம் மதிப்பு, பழுதுபார்ப்பு, ஊதியம் உள்ளிட்ட 11 காரணிகளை கணக்கில் கொண்டதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். டிரக் கடக்கும் தூரம் கிலோமீட்டரிலும், டன்களில் சுமந்து செல்லும் எடையிலும் இதைப் பிரித்தால் ஒரு டன்னுக்கு ஒரு கி.மீ.க்கு (PTPK) சராசரி விலை கிடைக்கும்.

அதானி குழுமம் ACLக்கு ரூ. 10.58 PTPK மற்றும் ACC க்கு ரூ.11.41 PTPK ஆகியவற்றுக்கு எதிராக ஒரு டன் ஒன்றுக்கு ஒரு கிமீ-க்கு (PTPK) ரூ.6 வழங்குவதாக அறியப்படுகிறது. லாரி இயக்குபவர்கள் இதை ஏற்க மறுத்ததால், அதானி குழுமம் தர்லாகாட்டில் உள்ள அம்புஜா ஆலையையும், பிலாஸ்பூரில் உள்ள ஏ.சி.சி ஆலையையும் மூடியது.

உரிய விடாமுயற்சி மற்றும் தலையீட்டின் அவசியத்தை மேற்கோள் காட்டி, அதானி சிமென்ட் சரக்குக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு அதன் சொந்த கட்டமைப்பை முன்மொழிந்தது. அந்தக் கடிதத்தில், தலைமை நிர்வாக அதிகாரி அஜய் கபூர், சரக்குக் கணக்கீட்டிற்கு ஆண்டுக்கு உகந்த கிமீ என்பது 50,000 கிமீ ஆக இருக்க வேண்டும். மூன்று வருட காலக்கெடுவிற்குள் ஒரு சுமூகமான மாற்றத்தை மேற்கொள்ள, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 5,000 கிலோமீட்டர் அதிகரிப்புடன், இப்போது ஆண்டுக்கு 40,000 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அதிகப்படியான வாகனங்களை படிப்படியாக அகற்றும் திட்டத்தையும் அஜய் கபூர் முன்வைத்தார். "ஜனவரி 12, 2023 தேதியிட்ட எங்களின் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அம்புஜா மற்றும் ACC இரண்டிற்கும் தற்போதைய 3,311 டிரக்குகளுக்கு பதிலாக 550 டிரக்குகள் மட்டுமே தேவை. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகப்படியான லாரிகளை படிப்படியாக அகற்ற முன்மொழியப்பட்டுள்ளது,” என்று அவர் கடிதத்தில் முன்மொழிந்தார், மேலும் புதிய லாரிகளைச் சேர்ப்பதற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

”மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறையைப் போலவே போக்குவரத்து தொடர்பான அனைத்து செயல்பாட்டு முடிவுகளும் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். டிரக்குகளின் எண்ணிக்கை, பாதை போன்றவை சந்தைக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். லாரிகளின் திறன் மற்றும் வகை ஆகியவை அவற்றின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும்” என்று நிலைக்குழுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க துணைக் குழுவை அமைத்து, உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட ஃபார்முலாவின் அடிப்படையில் சரக்குக் கட்டணத்தைக் கணக்கிட அரசுக்குச் சொந்தமான நிறுவனமான ஹிம்கான் (HIMCON) -ஐ பணித்தது. ஹிம்கான் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னும் அறியப்படவில்லை. அதானி சிமெண்ட் இரண்டு ஆலைகளையும் மூடிய ஒரு வாரத்தில் துணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கு தொழில் துறை முதன்மை செயலாளர் ஆர்.டி.நாஜிம் தலைமை தாங்குகிறார்.

50,000 கிமீ தூரத்தை அடிப்படையாகக் குறிப்பிடும் நிறுவனத்தின் கணக்கீடு எங்கள் நலன்களுக்கு எதிரானது, ஏனெனில் லாரிகள் அவ்வளவு தூரத்தை கடக்காது என்பது அனைவருக்கும் தெரியும். சராசரியாக ஆண்டுக்கு 21,000 கி.மீ. ஆண்டுக்கு அதிக தூரம் இருப்பதால், அவர்களுக்கு செலவு குறைவாக இருக்கும். நிறுவனத்தின் பகுத்தறிவு எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. HIMCON அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்,” என்று சோலனில் உள்ள டிரக்கர்ஸ் சங்கத்தின் தலைவர் ஜெய் தேவ் கவுண்டல் கூறினார்.

அதிகப்படியான வாகனங்களை நீக்கும் அதானி குழுமத்தின் கோரிக்கை குறித்து ஜெய் தேவ் கவுண்டல் கூறுகையில், “டிரக்குகளின் எண்ணிக்கை தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. 2010ல், ஆலைகளுக்கு அதிக வாகனங்கள் தேவைப்பட்டதால், அவை வழங்கப்பட்டன. தவிர, சரக்குக் கட்டணங்கள் 2019 இல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. இப்போது அரசாங்கத்தின் அறிக்கையின் மீது அனைத்து நம்பிக்கைகளும் தங்கியுள்ளன,” என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு, தொழில்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சவுகான், “சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், எழுப்பப்பட்ட பிரச்சினைகளை ஆராய ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விகிதங்களை தீர்மானிக்க ஹிம்கானும் இணைக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி ஆலைகள் மூடப்பட்டதால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காண விரும்புகிறோம்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Himachal Pradesh Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment