மோடி ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார்; ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi swearing date

நரேந்திர மோடி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாக பா.ஜ.க தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

ஆனால், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

இது குறித்து குடியரசுத்த தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 9 ஆம் தேதி (09.06.2024) இரவு 07.15 மணிக்குப் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் எனக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், 3-வது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. 

Advertisment
Advertisements

ஆங்கிலத்தில் படிக்க:

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர், இதில் 8,000 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

தற்போது, இருதரப்பு சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்துள்ளதாகவும், பதவியேற்பு விழா முடிந்து ஒரு நாள் கழித்து விருந்தினர்கள் தங்கள் நாடு திரும்புவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் தங்கள் மனைவி மற்றும் மூன்று விருந்தினர்களுடன் வருவார்கள் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏஜென்சிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த, நிகழ்வுக்கு முன் ஒரு ஒத்திகையை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: