இந்தியா-சீனா இடையே யார் தலையீடும் தேவை இல்லை: ரஷ்யா அறிவிப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பலதரப்பட்ட அமைப்பில் கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச உறவுகள் பின்பற்றும் நெறிமுறைகளையும் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பலதரப்பட்ட அமைப்பில் கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச உறவுகள் பின்பற்றும் நெறிமுறைகளையும் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பலதரப்பட்ட அமைப்பில் கூட்டாளிகளின் நியாயமான ஆர்வத்தை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச உறவுகள் பின்பற்றும் நெறிமுறைகளையும் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டினார்.
Advertisment
ரஷ்யா-இந்தியா-சீனா (ஆர்.ஐ.சி) முத்தரப்பு மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்த சிறப்புக் கூட்டம் சர்வதேச உறவுகளின் கொள்கைகள் சோதனைக்குள்ளான நேரத்தில் கொள்கைகளில் எங்கள் நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது. ஆனால், இன்றைய சவால் என்பது கருத்துகள் மற்றும் விதிமுறைகளில் மட்டுமல்ல, அதே அளவு அவற்றின் நடைமுறையிலும் இருக்கிறது.” என்று கூறினார்.
கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறை நடந்த பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சீனப் பிரதிநிதி வாங் யி உடன் பங்கேற்ற முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும். கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் ஒரு கம்மாண்டிங் அதிகாரி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
Advertisment
Advertisements
“உலகின் முன்னணி குரல்கள் எல்லா வகையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை மதித்தல், கூட்டாளிகளின் நியாயமான நலன்களை அங்கீகரித்தல், பலதரப்புவாதத்தை ஆதரித்தல் மற்றும் பொதுவான நன்மைகளை ஊக்குவித்தல் ஆகியவை நீடித்த உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும்” என்று அவர் ஜெய்சங்கர் கூறினார்.
இதனிடையே, லடாக் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலைப்பாட்டிற்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர், செர்ஜி லாவ்ரோவ், இரு நாடுகளுக்கும் வெளியில் இருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று கூறியதுடன், புது டெல்லி-பெய்ஜிங் அமைதியான தீர்மானத்திற்கு தங்கள் உறுதியைக் காட்டியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய ஒழுங்கில் இந்தியாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் வரலாற்று அநீதி கடந்த 75 ஆண்டுகளாக சரி செய்யப்படவில்லை என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
உலகின் தற்போதைய யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஐக்கிய நாடுகள் சபைக்குள் சீர்திருத்தங்கள் தேவை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
மேலும், “ஆனால் வரலாற்றைத் தாண்டி, சர்வதேச விவகாரங்களும் சமகால யதார்த்தத்துடன் பொருந்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை 50 உறுப்பினர்களுடன் தொடங்கியது; இன்று அது 193 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நிச்சயமாக, அதன் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர முடியாது என்ற உண்மையை மறுக்க முடியாது. உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் நாங்கள், ஆர்.ஐ.சி நாடுகள் தீவிரமாக பங்கேற்றுள்ளோம். சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையின் மதிப்பை நாங்கள் இப்போது இணைப்போம் என்பது இந்தியாவின் நம்பிக்கை” என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ரஷ்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்.ஐ.சி கூட்டம் நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு அமர்வு அழைக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"