ஜெய்சங்கர் மீதான பாதுகாப்பு அத்துமீறல்: இந்தியா கடும் கண்டனம்

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமர்ந்திருந்த காரை நோக்கி, ஒருவர் வேகமாகச் சென்ற சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jaisankar issue

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தை கண்டித்த இந்தியா, "ஜனநாயக சுதந்திரத்தை இதுபோன்ற நபர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Deplore misuse of democratic freedom’: India reacts to security breach during S Jaishankar’s UK visit

 

Advertisment
Advertisements

எக்ஸ் தளத்தில் பரவும் வீடியோவில், மூவர்ணக் கொடியுடன் ஒரு நபர் ஜெய்சங்கர் அமர்ந்திருக்கும் காரை நோக்கி விரைவதைக் காணலாம். அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அந்த நபரைத் தடுத்து அழைத்துச் சென்றபோதும், காலிஸ்தான் ஆதரவுக் கொடிகளுடன் போராட்டக்காரர்கள் குழு கோஷங்களை எழுப்புவதைக் காணலாம்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "வெளியுறவுத்துறை அமைச்சர், இங்கிலாந்துக்கு சென்ற போது பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்ட காட்சிகளை நாங்கள் பார்த்தோம். இந்த பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறினார்.

மேலும், "இப்படிப்பட்டவர்கள், ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் அரசு தங்கள் அனைத்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம், லண்டனில் உள்ள இந்திய உயர் அலுவலகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் குழுவினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்த அலுவலகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். 

India England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: