இந்தியாவில் கவர்னர் பதவி என்பது பலவீனமானது, கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ண தேவி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை. மனதில் பட்டதை பேசவும் முடியாது. எனது வார்த்தை டில்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன். நாட்டில் உள்ள பணக்காரர்கள், நாட்டில் உள்ள கல்வி முறையை மேம்படுத்த உதவி செய்வதில்லை என்ற எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.