Advertisment

ஜம்மு: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை!

பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக் கொலை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் இன்று அத்துமீறி நுழைந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

Advertisment

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை இவரது வீட்டை நோக்கி மர்ம நபர் ஒருவர் ஓட்டி வந்த கார், வீட்டின் முன்பக்க கேட் மீது காரை மோதியது. தொடர்ந்து, அந்த நபர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தும் அவர் நிற்காமல் உள்ளே சென்றுள்ளார். இதனால், பாதுகாப்புப் படையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபர் யார்? என்பது விசராணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், எதற்காக அவர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஜம்மு சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் விவேக் குப்தா கூறுகையில், “அந்த மர்ம நபர், மெயின் கேட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடனும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு காயம் ஏற்படடது. தொடர்ந்து, வீட்டிற்குள் நுழைந்து அந்த நபர் அங்கிருந்த சில பொருட்களை அடித்து நொறுக்கினார். இதையடுத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்றார்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment