ராஜஸ்தான்: 'எங்களுக்காக யார் போராடுகிறார்கள் என்பது தெரியும்': பைலட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய இளைஞர்கள்

ராஜஸ்தானில் கடுமையான உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் 5 நாள் யாத்திரை தொடங்கியுள்ளார்.

ராஜஸ்தானில் கடுமையான உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் 5 நாள் யாத்திரை தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pilot at Jan Sangharsh Yatra

Pilot at Jan Sangharsh Yatra

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் கெலாட்- முன்னாள் துணை முதல்வர், மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஈடுபட்டார். தற்போது இதே கோரிக்கையை முன்வைத்து 125 கி.மீ. தூரம் ஜனசங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் 5 நாட்கள் நடைப்பயணத்தை கடந்த வியாழக்கிழமை அவர் தொடங்கியுள்ளார். மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் கெலாட், பைலட் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் 2-வது நாளான நேற்று (வெள்ளிகிழமை) ஜனசங்கர்ஷ் யாத்ராவில் இளைஞர்கள் கலந்து கொண்டு பைலட் உடன் நடைப்பயணத்தில் ஈடுபட்டனர்.

விராட்நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் லலித் குமார்(30) கூறுகையில், பைலட்-டை முதல்வராக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்றார். அஜ்மீரிலிருந்து ஜெய்ப்பூர் வரை நடைப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

யாத்ராவில் இணைந்தது குறித்து கேட்ட போது, தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து என வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்களிடையே "கோபம்" இருப்பதாக லலித் கூறுகிறார். இது அரசாங்கத்தின் நடவடிக்கையின்மையால் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

Advertisment
Advertisements

இளைஞர்களிடையே நிலவும் இந்த அமைதியின்மையை முன்வைத்து பைலட், கட்சிக்குள் தனது நிலையைத் தட்டிச் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கிறார். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது, பிரச்சனையாக வெடித்துள்ளது.

பைலட் கூறுகையில், இளைஞர்கள் கவலை அடைந்துள்ளனர். உதவியற்றவர்களாக உள்ளனர். ஏனெனில் வேலை வாய்ப்புகள் பற்றாக்குறை மட்டுமல்லாமல், காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிவும் மாநிலத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட். லிமிடெட் (CMIE) டிசம்பர் 2022 இல் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 37.4 சதவீதமாக ஹரியானாவைக் காட்டியது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 28.5 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajasthan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: