Advertisment

நேரு நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nehru death anniversary

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

இதையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள  நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வலிமையான சுதந்திர தேசத்தை உருவாக்கியதில் நேருவின் பங்கு அளப்பரியது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi Rahul Gandhi Jawaharlal Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment