முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Many democratic nations as young as India, soon degenerated into dictatorships.
On his death anniversary, let us remember Jawaharlal Nehru Ji’s contribution in building strong, independent, modern institutions, that have helped democracy survive in India for over 70 years ????????
— Rahul Gandhi (@RahulGandhi) May 27, 2019
Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary. We remember his contributions to our nation.
— Narendra Modi (@narendramodi) May 27, 2019
வலிமையான சுதந்திர தேசத்தை உருவாக்கியதில் நேருவின் பங்கு அளப்பரியது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.