முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்களை தாக்கியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை தாக்கியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்க உறுப்பினர் அய்ஷே கோஷ் பலமாக தாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள கதவுகள், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு அகில பாரதிய வித்யார்தி பரிஷாத் அமைப்பு தான் காரணம் என்று மாணவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த குற்றச்சாட்டினை ஏ.பி.வி.பி. மறுத்துள்ளது.
பல்கலைக்கழக பேராசியர் சுசரித்தா சென் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்கள் சங்க தலைவர் ஆய்ஷே கோஷ்
பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை தாக்கியவர்கள் கைகளில் பெரிய கட்டைகளை கொண்டு வளாக உடைமைகளையும் அடித்து நொறுக்கியதாக கூறியுள்ளனர்.
பின்பு டெல்லி காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து சட்ட ஒழுங்கை சரி செய்தனர். கவர்னர் அனில் பைஜால் காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசுவதை தடுத்து நிறுத்தப்பட்டது. வளாகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் அழைப்புகளை தொடர்ந்து 700 காவல்துறையினர் பல்கலைக்கழகத்தில் குவிந்தனர்.