/indian-express-tamil/media/media_files/C6xDrJN8iIA3Jvif4CQh.jpg)
கமல்நாத் விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் சிந்த்வாராவில் உள்ள அவரது கோட்டையைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உட்பட அவரது ஆதரவாளர்களுக்கு இடையே ஒரு இரகசிய சந்திப்பு நடந்தது.
இதையடுத்து, அவரது விசுவாசிகள் காங்கிரஸுடனேயே கமல்நாத் இருப்பார் என்று கூறியுள்ளனர்.
இன்று (பிப்.19,2024) நடந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்த பிறகு, முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன், “(நாத்) பாஜகவில் சேரும் கேள்விக்கே இடம் இல்லை. கமல்நாத் காங்கிரஸின் தேசிய அளவிலான அரசியல்வாதி, கட்சிக்காக தனது முழு வாழ்க்கையையும் கொடுத்தவர்.
லோக்சபா தேர்தலில் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாத் இன்னும் மீடியாக்களிடம் பேசவில்லை, அவரது நம்பிக்கைக்குரிய சஜ்ஜன் சிங் வர்மா விரைவில் அவ்வாறு செய்வார் என்று கூறினார்.
சிந்த்வாரா காங்கிரஸ் தலைவர்கள் நாத்திடம் இருந்து கேட்க காத்திருக்கின்றனர், சிலர் அவர் மாறினால் பாஜகவிற்குள் செல்வோம் என்றும் சிலர் அவரை காங்கிரஸிலேயே இருக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
“நாங்கள் சென்று கமல்நாத்திடம் என்ன பிரச்சினை என்று கேட்டோம், அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்றும் அவர் இறக்கும் நாள் வரை இருப்பார் என்றும் கூறி விஷயத்தை முடித்து வைத்தார். நகுல்நாத் எங்கும் செல்லமாட்டார். 45 ஆண்டுகள் காங்கிரஸுக்காக உழைத்ததாகவும், இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்றும் அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸின் மத்தியப் பிரதேச பிரிவு அதன் எம்.எல்.ஏ.க்களை ஒன்றாக வைத்திருக்கும் முயற்சியில் தொடர்புக் கொண்டது.
அதே நேரத்தில் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்று நாத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். நாத்தின் விசுவாசிகளுடன் தொடர்பு கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் குழு ஒன்று போபாலில் இருந்து சிந்த்வாராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எம்எல்ஏ சோகன் லால் வால்மீகி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார், நாத் காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். “நீங்கள் எப்போதும் காங்கிரஸையும் தேசத்தையும் வலுப்படுத்த உழைத்திருக்கிறீர்கள். நாடு முழுவதும் உள்ள உங்கள் ஆதரவாளர்களும் சிந்த்வாராவும் உங்களுடன் இருக்கிறார்கள்.
சிந்த்வாராவில் உள்ள தனது குடும்பக் கோட்டையின் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு நாத் சனிக்கிழமை புது தில்லிக்கு வந்திறங்கினார். பாஜகவின் மத்தியப் பிரதேச தலைவர் வி டி சர்மா, நாத் கட்சியில் இணைவதை வரவேற்கிறேன் என்று கூறியதை அடுத்து இது வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.