New Update
/indian-express-tamil/media/media_files/3D2o9PJ0qtfBJx2Gg86E.jpg)
லோக்சபா எம்.பி கங்கனா ரணாவத் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு. (Express file photo)
கட்சியின் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட ரணாவத்துக்கு அனுமதியோ அல்லது அதிகாரமோ இல்லை என்று பா.ஜ.க கூறியுள்ளது.
லோக்சபா எம்.பி கங்கனா ரணாவத் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு. (Express file photo)
விவசாயிகளின் போராட்டம் குறித்த கங்கனா ரணாவத்தின் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என பா.ஜ.க திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், மாண்டி மக்களவை எம்.பி எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளது.
“விவசாயிகள் இயக்கத்தின் பின்னணியில் பா.ஜ.க எம்.பி கங்கனா ரணாவத் கூறிய கருத்து அக்கட்சியின் கருத்து அல்ல. கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்கு பா.ஜ.க தனது மறுப்பைத் தெரிவிக்கிறது.” என்று பா.ஜ.க கூறியுள்ளது.
மேலும், கட்சியின் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட கங்கனா ரணாவத்துக்கு அனுமதியோ அல்லது அதிகாரமோ இல்லை என்று பா.ஜ.க கூறியுள்ளது.
“விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் இந்தியாவில் வங்கதேசம் போன்ற அனர்த்தம் நடந்திருக்கலாம்” என்று ரணாவத் கூறியதற்குப் பிறகு கட்சியின் விளக்கம் வந்துள்ளது.
“வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டினர் உதவியுடன் நம்மை அழிக்க திட்டமிட்டுள்ளனர். நம்முடைய தலைமையின் தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்” என்று மாண்டி எம்.பி. தனது வரவிருக்கும் திரைப்படமான ‘எமர்ஜென்சி’க்கான விளம்பரத்தின் போது கூறினார்.
“சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்” மற்றும் சமூக நல்லிணக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு பா.ஜ.க உறுதிபூண்டுள்ளது” என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.