Advertisment

திப்பு பிரியர்களை விரட்டுங்கள்; ராமர் பஜனை பாடுபவர்கள் மட்டும் இருக்கட்டும் - கர்நாடக பா.ஜ.க தலைவர் கட்டீல்

இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக திப்பு சுல்தானைக் குறிப்பிட்டு பேசியுள்ள கர்நாடக பா.ஜ.க தலைவர் கட்டீல், முன்னதாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விநாயக் சாவர்க்கருக்கும் 18-ம் நூற்றாண்டு மன்னருக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிட்டிருந்தார்.

author-image
WebDesk
New Update
Nalin Kumar Kateel, Karnataka BJP, பாஜக, கர்நாடகா, நளின் குமார் கட்டீல், திப்பு சுல்தான், Tipu Sultan row, indian express, bengaluru news

ராமர் பஜனை செய்பவர்கள் மட்டுமே இந்த மண்ணில் இருக்க வேண்டும் என்றும், திப்பு சுல்தான் ஆதரவாளர்களை காட்டுக்கு விரட்டி அடிக்க வேண்டும் என்றும் கர்நாடக பா.ஜ.க தலைவர் நளின் குமார் கட்டீல் புதன்கிழமை மற்றொரு சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள யெல்புர்காவில் நடந்த கூட்டத்தில் பேசிய கர்நாடக பா.ஜ.க தலைவர் கட்டீல், “இந்த மண்ணில் திப்புவின் சந்ததி வேண்டுமா, ராம பக்தர்கள் அல்லது ஆஞ்சநேய பக்தர்கள் வேண்டுமா . திப்புவை நேசிப்பவர்கள் இந்த மண்ணில் இருக்கக்கூடாது, அவர்கள் மட்டும் இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்று உறுதிமொழி எடுத்து முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராமரின் பஜனைகளைப் பாடுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம் என வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கூறிய கட்டீல், 18ஆம் நூற்றாண்டின் மைசூர் மன்னரை இந்த வாரம் இரண்டாவது முறையாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

“நாங்கள் ராமரின் பக்தர்கள். நாங்கள் ஆஞ்சநேயர் பக்தர்கள்… நாங்கள் திப்புவின் சந்ததி அல்ல. எனவே, யெல்புர்கா மக்களிடம் நீங்கள் ஆஞ்சநேயருக்கு பிரார்த்தனை செய்கிறீர்களா அல்லது திப்புவின் பெயரை சொல்வீர்களா என்று கேட்கிறேன்” என்று கட்டீல் கேட்டார்.

அதற்கு ஆஞ்சநேயர் என்று மக்கள் பதிலளித்தபோது, ​​கட்டீல், “அப்படியானால், திப்புவின் பஜனை செய்பவர்களை நீங்கள் காட்டிற்கு விரட்ட மாட்டீர்களா? உங்களுக்கு திப்புவின் சந்ததி வேண்டுமா, அல்லது ராம பக்தர்கள் வேண்டுமா, ஆஞ்சநேயர் பக்தர்கள் இந்த மண்ணில் இருக்க வேண்டுமா என்று சபதம் எடுத்து முடிவு செய்யுங்கள்… திப்புவை நேசிப்பவர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது, ராமர் பஜனை செய்பவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறினார்.

கட்டீல் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு வாரத்திற்கு முன், சிவமோகாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், “சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே நடக்காது, மாறாக சாவர்க்கர் மற்றும் திப்புவின் சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும்” என்று கட்டீல் கூறினார்.

ஜனவரியில், சாலைகள், வடிகால் மற்றும் கழிவுநீர் போன்ற சிறிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம் என்றும் ‘லவ் ஜிஹாத்தை’ நிறுத்துவதில் கவனம் செலுத்துமாறும் கட்டீல் மக்களைக் கேட்டுக் கொண்டார். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ‘லவ் ஜிஹாத்தை’ நிறுத்த விரும்பினால், நமக்கு பா.ஜ.க தேவை,” என்று கட்டீல் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp India Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment